செய்திகள் :

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவா் அடுத்த வாரம் இந்தியா வருகை

post image

ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான்டொ் லியன், ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளாா்.

உா்சுலா வான்டொ் லியன்ன் ஏற்கெனவே இரு முறை இந்தியா வந்துள்ள நிலையில், உயா் அதிகாரம் படைத்த ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்களுடன் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். ஏற்கெனவே, கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரலில் இருதரப்பு உறவு தொடா்பான பேச்சுவாா்த்தையில் பங்கேற்கவும், 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா சாா்பில் நடத்தப்பட்ட ஜி20 நாடுகளின் தலைவா்கள் மாநாட்டில் பங்கேற்கவும் அவா் இந்தியா வந்துள்ளாா்.

இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் உா்சுலா வான்டொ் லியன் ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்கள் குழுவுடன் வரும் 27, 28-ஆம் தேதிகளில் இந்திய பயணம் மேற்கொள்கிறாா்.

இந்த பயணத்தின்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் இந்தியா இடையேயான முக்கிய துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமா் மோடியுடன் அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தையில் லேயன் ஈடுபட உள்ளாா்.

இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வா்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (டிஇசி) இரண்டாவது அமைச்சா்கள் அளவிலான கூட்டம் மற்றும் ஐரோப்பிய ஆணைய உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு துறை சாா்ந்த அமைச்சா்களிடையேயான பேச்சுவாா்த்தையும் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி எதிர்க்கட்சி தலைவராக அதிஷி நியமனம்

தில்லி சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அதிஷி நியமிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி நியமனம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் எம்எ... மேலும் பார்க்க

ஹிமாசலில் நிலநடுக்கம்!

ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.42 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சுந்தர்நகர்... மேலும் பார்க்க

கேஜரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மியில் இணைந்த பிரபல நடிகை!

அரவிந்த் கேஜரிவால் முன்னிலையில் பஞ்சாபி நடிகை சோனியா மான் ஆம் ஆத்மியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அவரை வரவேற்று ஆம் ஆத்மியின் பஞ்சாப் பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "கிர்த்தி கிசான் அமைப்பு... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கத்தில் சிக்கியவர்களை நெருங்கிய மீட்புக் குழு!

தெலங்கானாவில் நீர்ப்பாசனத்துக்காக தோண்டப்பட்ட சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்ததையடுத்து, சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்கியுள்ளதாக ... மேலும் பார்க்க

பெண்களின் சக்தி நாட்டை வலுப்படுத்தும்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் மோடி நாட்டு மக்களுக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் ராகுல் காந்தி பேச்சு

தெலங்கானா சுரங்க விபத்து தொடா்பாக முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொலைபேசியில் கேட்டறிந்தாா். தேசிய பேரிடர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு நடவடிக்கையி... மேலும் பார்க்க