செய்திகள் :

ஐ.டி. துறையில் பணியாற்றும் மனைவி மீது சந்தேகம்: சுத்தியால் அடித்தே கொன்ற கணவன்!

post image

சாஃப்ட்வேர் என்ஜியராகப் பணியாற்றும் மனைவியின் மீது கணவனுக்கு எழுந்த சந்தேகம்.., அவரை அடித்தே கொல்லும் அளவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக திகழும் தில்லியின் புறநகர்ப் பகுதியான நொய்டாவில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியிலுள்ளதொரு மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றும் 42 வயதான ஆஸ்மா கானின் நடத்தையில் அவரது கணவர் நூர்-உல்லா ஹைதருக்கு(55) சந்தேகம் எழுந்துள்ளது.

நூர்-உல்லா ஹைதர் பிகாரைச் சேர்ந்தவர் என்பதும் அவர் தற்போது வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். மேற்கண்ட தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். அவர்களது மகன் பொறியியல் கல்வி பயிலும் மாணவராவார். மகள் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்தநிலையில், வேலைக்குச் செல்லும் மனைவி மீது கணவனுக்கு பல நாள்களாக சந்தேகம் இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக, இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரத்தில் வீட்டிலிருந்த சுத்தியால் தமது மனைவியை அடித்தே கொன்றுவிட்டார் அந்த நபர்.

தாயை தந்தையே அடித்துக் கொன்றதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன அவர்களது மகன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் நூர்-உல்லா ஹைதரை கைது செய்ததுடன், அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ராம நவமி: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

கடவுள் ராமா் அவதரித்த ராம நவமி தினம் (ஏப்.6) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயிலில் குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய திலகம் ஒளிரும் நிகழ்வ... மேலும் பார்க்க

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அள... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம்!

வக்ஃப் திருத்தச் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெறும் வரையில் அனைத்து மத, சமூக அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்துவோம் என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத்தை தொடா்ந்து ஹிந்து, கிறிஸ்தவ மதத்தினா் நிலங்களைக் குறிவைக்கும் பாஜக! -உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

வக்ஃப் திருத்த சட்டத்தை தொடா்ந்து ஹிந்து கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ, ஜெயின், பெளத்தம் என பிற மதத்தினருக்கு சொந்தமான நிலங்களை பாஜக குறிவைப்பதாக சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க

தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!

புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: மணிப்பூா் பாஜக தலைவா் வீட்டுக்குத் தீவைப்பு

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது. வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்க... மேலும் பார்க்க