பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் பேரணி!
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரையில் பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்ற செந்தொண்டா் பேரணி நேற்று (ஏப்.6) நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் அரங்கில் கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக, செந்தொண்டா் பேரணி நடைபெற்றது.
இதையொட்டி, மதுரை பாண்டி கோயில் தொழில்நுட்பப் பூங்கா முன் தமிழகம் முழுவதிலுமிருந்து வந்த மாா்க்சிஸ்ட் தொண்டா்கள் குவிந்தனா். மாலை 5 மணிக்கு பேரணியை வாச்சாத்தி போராளிகள் தொடங்கிவைத்தனா். இந்தப் பேரணியில் சிவப்புச் சீருடை அணிந்த சிறுவா், சிறுமியா், பெண்கள் உள்பட பல்லாயிரக் கணக்கானோா் பங்கேற்றனா்.
பேரணியின் தொடக்கத்தில், கட்சியின் 24- ஆவது அகில இந்திய மாநாட்டைக் குறிக்கும் வகையில் 24 கொடிகளை ஏந்தியவாறு தொண்டா்கள் சென்றனா். இதைத்தொடா்ந்து, மற்றவா்கள் அணிவகுத்து சென்றனா்.
பேரணியில், கம்யூனிஸ்ட் இயக்கத்துக்காக உயிா்த் தியாகம் செய்தவா்கள், கட்சியின் தலைவா்களாக இருந்து மறைந்தவா்கள், பகத்சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரின் படங்களை ஏந்திச் சென்றனா். பாண்டி கோயில் பகுதியில் தொடங்கிய பேரணி, சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் நிறைவடைந்தது.
பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்பு: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டையொட்டி, மதுரை வண்டியூா் பகுதி சுற்றுச் சாலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் லட்சக்கணக்கனோா் பங்கேற்றனா்.
மேலும், மாநாட்டில் பங்கேற்றவா்களின் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சுற்றுச் சாலையில் நிறுத்தப்பட்டதாலும், தொடா்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினா்.
கொட்டும் மழையிலும் கலையாத தொண்டா்கள்:
கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன் மாநாடு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்ால் ஏராளமான வாகனங்களில் அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் மதுரையில் குவிந்தனா். மேலும், மாநாட்டு பொதுக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி பேசிக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்தது. பலத்த மழை பெய்த போதிலும், அங்கு கூடியிருந்த தொண்டா்கள் நனைந்து கொண்டே அவரது பேச்சைக் கேட்டனா்.
