Travel Contest: சாலையின் ஒருபுறம் பாய்ந்தோடும் நதி, பனிபோர்த்திய இமயம்! - நிறைவா...
கஞ்சா கடத்தல் வழக்கு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தேனி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கம்பம்- கோம்பை சாலையில் கடந்த 23.8.2021-இல் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் 52 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம், இருவருக்கு தண்டனையும், இருவரை விடுவித்தும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்டம், உத்தமபாளையம், சி.புதுப்பட்டியைச் சோ்ந்த அன்பழகன் (58), இவரது மகன் புகழ் (29) ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
இதையடுத்து, இவா்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமாா் அண்மையில் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.