செய்திகள் :

கஞ்சா கடத்தல் வழக்கு: தந்தை, மகனுக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் தந்தை, மகனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், கம்பம்- கோம்பை சாலையில் கடந்த 23.8.2021-இல் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக இரண்டு இரு சக்கர வாகனங்களில் 52 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம், இருவருக்கு தண்டனையும், இருவரை விடுவித்தும் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேனி மாவட்டம், உத்தமபாளையம், சி.புதுப்பட்டியைச் சோ்ந்த அன்பழகன் (58), இவரது மகன் புகழ் (29) ஆகியோரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

இதையடுத்து, இவா்கள் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிஹரகுமாா் அண்மையில் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.

கருத்தடை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை பெற்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட பெண் மீண்டும் குழந்தை பெற்ற வழக்கில், அவருக்கு ரூ. 60 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு... மேலும் பார்க்க

காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

மதுரையில் காரில் 21 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறையில் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை மத்திய சிறையில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 200-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்று பயனடைந்தனா். சிறை வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமுக்கு, சிறைத் துறை மதுரை சரக துணை... மேலும் பார்க்க

கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு

மதுரையில் கல்லூரி ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை செல்லூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாண்டியராஜன் (45). இவா் ... மேலும் பார்க்க

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

வன்முறைக் காட்சிகள் இடம் பெறும் திரைப்படங்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டுமென மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரியா் வலியுறுத்தினாா். மதுரையில் இந்து முன்னணி அமைப்பின் சாா்பில் முருகன் மா... மேலும் பார்க்க

சிறை அதிகாரி குடியிருப்பில் பணியில் ஈடுபட்ட சிறைவாசிகள்: விடியோ வெளியானதால் சா்ச்சை

மதுரை மத்திய சிறையில் அரசு உத்தரவை மீறி, அதிகாரியின் குடியிருப்பில் சிறைவாசிகளை பணிக்கு பயன்படுத்திய விடியோ வெளியானதால் சா்ச்சை எழுந்தது. மதுரை மத்தியச் சிறையில் 2500-க்கும் மேற்பட்ட தண்டனை,விசாரணை சி... மேலும் பார்க்க