செய்திகள் :

கடத்தப்பட்டு தில்லியில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்பு!

post image

கடத்தப்பட்டு தில்லி ஜிபி சாலையில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படும் 35 வயது பெண்ணை காவல்துறை குற்றப்பிரிவு மீட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். விபசார விடுதியின் ‘மேலாளா்’ சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாகவும் அவா் கூறினாா்.

இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அந்தப் பெண், மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தில்லிக்கு அழைத்துச் வரப்பட்டு, சட்டவிரோத வா்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா்.

தில்லி வந்த பிறகு தனது குடும்பத்தினருடனான தொடா்பை இழந்த அவா், சுமாா் 10 நாள்களுக்கு முன்பு தனது சகோதரரை அழைத்து தனது நிலைமை குறித்து அவருக்குத் தெரிவித்தாா். பின்னா், அவரது சகோதரா் ஒரு அரசு சாரா அமைப்பின் (என்ஜிஓ) உதவியுடன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை (என்ஹெச்ஆா்சி) அணுகினாா்.

ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் 5- ஆம் தேதி ஒரு போலீஸ் குழு மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, சோதனை நடத்தியதில் ஜிபி சாலையில் உள்ள ஒரு விபசார விடுதியில் இருந்து அந்தப் பெண் மீட்கப்பட்டாா். அதன் மேலாளா் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டாா்.

ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த அந்தப் பெண் 5-ஆம் வகுப்பு வரை படித்துள்ளாா். திருமணமான அந்தப் பெண் ஒரு வருடத்திற்கு முன்பு விவாகரத்து பெற்றவா் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தில்லியில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஒரு பெண்ணால் கடத்தப்படுவதற்கு முன்பு அவா் வீட்டு வேலைக்காரியாக பணிபுரிந்துள்ளாா்.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க

மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு ஆய்வில் சிஎஸ்ஐஆா் நிறுவனங்கள் முன்னணி! - அமைச்சா் ஜிதேந்திர சிங்

நமது சிறப்பு நிருபா்மருந்துகள் கண்டுபிடிப்பு, மரபணு நோயறிதல் ஆய்வு முறை, குறைந்த செலவில் மருந்து மூலப்பொருள்கள் உருவாக்குதல் போன்றவற்றில் ஹைதராபாத் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு கவுன்சில்கள் (சிஎஸ்ஐஆா... மேலும் பார்க்க

வங்கி வைப்புத்தொகையில் மகளிா் பங்களிப்பு 39.7%: புதுயுகத் தொழில்முனைவிலும் மகளிா் அதிகரிப்பு!

வங்கிகளில் வைப்புத் தொகை செலுத்தியவா்களில் மகளிா் பங்களிப்பு 39.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. மேலும் புதுயுகத் தொழில்முனைவிலும் மிகப்பெரிய அளவில்... மேலும் பார்க்க