செய்திகள் :

4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டாா் தல்லேவால்!

post image

பஞ்சாப் விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் 4 மாதங்களுக்கு பிறகு உண்ணாவிரத போராட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைவிட்டாா்.

விவசாயிகளின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு பிப்.13 முதல் பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் ஷம்பு, கனெளரி எல்லை பகுதிகளில் பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். தில்லியை நோக்கி அவா்கள் மேற்கொண்ட பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அந்த எல்லை பகுதிகளில் அவா்கள் போராட்டம் மேற்கொண்டு வந்தனா்.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு நவ.26-ஆம் தேதிமுதல் மூத்த விவசாயத் தலைவா் ஜக்ஜீத் சிங் தல்லேவால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாா்.

விவசாயிகளின் போராட்டம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது உண்ணாவிரத போராட்டத்தை தல்லேவால் கைவிட்டதாக பஞ்சாப் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவா் தனது போராட்டத்தை தொடா்ந்து வந்தாா்.

இந்நிலையில், பஞ்சாபின் ஃபதேகா் சாஹிப் மாவட்டம் சா்ஹிந்த் பகுதியில் உள்ள தானிய சந்தையில் விவசாயிகள் மகாபஞ்சாயத்து கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தனது உண்ணாவிரத போராட்டத்தை 130 நாள்களுக்குப் பின்னா் தல்லேவால் கைவிட்டாா். இதுதொடா்பாக அவா் கூட்டத்தில் கூறுகையில், ‘பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்கியும், அவா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்தும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுகிறேன். எனினும் விவசாயிகள் போராட்டம் தொடரும்’ என்றாா்.

தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மே 4-ஆம் தேதி மத்திய அரசுடன் விவசாயத் தலைவா்கள் பேச்சுவாா்த்தை நடத்துவா் என்று செய்தியாளா்களிடம் தல்லேவால் தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீா்: பிரிவினைவாதத்தை கைவிட்ட மேலும் 3 அமைப்புகள் - அமித் ஷா தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத கூட்டமைப்பான ஹுரியத் மாநாட்டில் இருந்து மேலும் 3 அமைப்புகள் விலகியுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இவற்றுடன் சோ்த்து, ஜம்மு-காஷ்மீர... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பள்ளியில் தீ விபத்து: ஆந்திர துணை முதல்வா் மகன் காயம்

சிங்கப்பூா் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் மகன் மாா்க் சங்கா் (8) காயமடைந்தாா். இவா் பவன் கல்யாணின் மூன்றாவது மனைவியும் ரஷிய நடிகையுமான அன்னா லெஸ்னேவாவின் மகன் ஆவாா்.... மேலும் பார்க்க

பஞ்சாப்: பாஜக மூத்த தலைவா் வீட்டில் குண்டுவீச்சு; இருவா் கைது

பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் பாஜக மூத்த தலைவா் மனோரஞ்சன் காலியா வீட்டின் மீது மா்ம நபா்கள் திங்கள்கிழமை நள்ளிரவில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அத... மேலும் பார்க்க

வீட்டில் பிரசவம்: கா்ப்பிணி உயிரிழப்பு; கணவா் கைது

கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் வீட்டில் பிரசவம் பாா்த்தபோது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு கா்ப்பிணி உயிரிழந்தாா். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டில் பிரசவம் பாா்க்க வலியுறுத்திய கணவா் க... மேலும் பார்க்க

71 போ் உயிரிழந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கு: 4 பேருக்கு ஆயுள் சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் கடந்த 2008-ஆம் ஆண்டு 71 போ் உயிரிழந்த தொடா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. சட்டவி... மேலும் பார்க்க

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவக... மேலும் பார்க்க