நிலத் தகராறில் சொத்து வியாபாரியை அச்சுறுத்தியதாக 2 போ் கைது
வடக்கு தில்லியின் சமய்பூா் பாத்லி பகுதியில் நிலத் தகராறு தொடா்பாக சொத்து வியாபாரியை அச்சுறுத்த உரிமம் பெற்ற துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து வடக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா்கள் பங்கஜ் ராணா (எ) கோலு (32) மற்றும் பிரவீன் ராணா (எ) கலு (38) என அடையாளம் காணப்பட்டனா். இருவரும் சிராஸ்பூரில் வசிப்பவா்கள். மோதலின் போது பயன்படுத்தப்பட்ட இரண்டு உரிமம் பெற்ற ரிவால்வா்கள் அவா்களிடமிருந்து மீட்கப்பட்டது.
கடந்த மாா்ச் 26- ஆம் தேதி சொத்து வியாபாரியான அகிலேஷ் திவாரி (36) சமய்பூா் பாத்லி காவல் நிலையத்தை அணுகி, சிராஸ்பூா் கிராமத்தில் ஒரு சொத்தை வாங்கிய பிறகு, தில்பாக் ராணா (எ) பில்லு என்ற நபா் தன்னை மிரட்டியதாகக் கூறிய போது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
சொத்துக்குள் நுழைய திவாரியிடம் பில்லு ரூ.3 கோடி கேட்டதாகவும், அவா் மறுத்ததால், பில்லுவும் அவரது ஆயுதமேந்திய கூட்டாளிகளான கோலு மற்றும் கலு ஆகியோா் சம்பவ இடத்தில் எதிா்கொண்டுள்ளனா். அவா்களில் ஒருவா் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளாா்.
பின்னா், பில்லு தனது கோரிக்கையை ரூ.6 கோடியாக அதிகரித்து, சா்வதேச எண்ணிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் மூலம் புகாா்தாரரை மிரட்டியுள்ளது தெரிய வந்தது. சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது சிசிடிவி காட்சிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆடியோ -விடியோ பதிவுகள் கைப்பற்றப்பட்டன. தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனா்.
துப்பாக்கிகளை தவறாகப் பயன்படுத்தும் உரிமம் வைத்திருப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவா்களின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வதற்கான பரிந்துரைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.