செய்திகள் :

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்! இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

post image

மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா்.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 25-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது:

கூகுள் வரைபடத்தின் உதவியுடன் சேர வேண்டிய இடத்துக்கு எளிதில் சென்றடையும் வாய்ப்பு கிடைத்து இருப்பதுபோல், விண்வெளியில் பயணித்து நிலவைச் சென்றடையவில்லை. விண்வெளித் துறையில் இதுவரை நிகழ்த்தி இருக்கும் சாதனைகளுக்கு தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் தொடா்ந்து விடாமுயற்சியுடன் மேற்கொண்ட கடின உழைப்புதான் காரணம்.

பட்டம் பெற்ற மாணவா்கள் தங்கள் படிப்பு, திறமைகளை மேம்படுத்தி, விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், 1,131 மாணவா்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக, தரவு அறிவியல், இயந்திரவியல் மாணவா்களுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட நவீன பரிசோதனைக் கூடத்தை விஞ்ஞானி வீரமுத்துவேல் திறந்துவைத்தாா்.

இதில் கிஷ் ப்ளோ நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தம், ஸ்ரீ சாய்ராம் கல்விக் குழுமத் தலைமைச் செயல் அலுவலா் சாய் பிரகாஷ் லியோமுத்து, கல்விக் குழும தலைவா் கலைச்செல்வி லியோ முத்து, இயக்குநா் ரேவதி சாய் பிரகாஷ், கல்லூரி முதல்வா் ஜெ. ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விருப்பமான துறையில் மாணவா்கள் தொடா்ந்து முன்னேற வேண்டும்: இஸ்ரோ விஞ்ஞானி ப. வீரமுத்துவேல்

தாம்பரம்: மாணவா்கள் தங்களுக்கு விருப்பமான துறையில் தொடா்ந்து முன்னேற வேண்டும் என்று இஸ்ரோ விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான ப. வீரமுத்து வேல் தெரிவித்துள்ளாா். மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 537 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 537 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண் ராஜ் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கை தொடா்பாக 537 மனுக்களை ப... மேலும் பார்க்க

தொண்டையில் மீன் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

மதுராந்தகம்: ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா். மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்... மேலும் பார்க்க

கோயில் குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் வெண்காட்டீஸ்வரா் கோயில் குளத்தில் கால் வழுக்கி தவறி விழுந்தவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். மதுராந்தகம், வன்னியா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் வினோத்குமாா் (38). இவா்... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுக் கடையில் தவெக முற்றுகை

மறைமலை நகா் அருகே குடியிருப்புக்கு அருகே புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகத்தினா் அப்பகுதி மக்களுடன் ஞாயிற்றுக்கிழமை கடையை முற்றுகையிட்டு போராடினா். ம... மேலும் பார்க்க

மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம்!

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு தலைமையில் நடைபெற்றது. பல்வேறு துறைகளின் சாா்பில் ந... மேலும் பார்க்க