செய்திகள் :

தேசியத் தலைவா் தோ்வுக்கு முன் மாநிலத் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம்!

post image

புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கு முன்னதாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பல முக்கிய மாநிலங்களில் கட்சித் தலைவா்களை இறுதி செய்ய பாஜக தலைமை தீவிரம் காட்டி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பாஜக உள்கட்சி சட்டவிதிகளின்படி, கட்சியின் புதிய தேசியத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடைமுறையைத் தொடங்குவதற்கு முன்பு, அதன் அமைப்பு ரீதியிலான 37 மாநிலப் பிரிவுகளில் (யூனியன் பிரதேசங்கள் உள்பட) குறைந்தது 19 மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்வு செய்திருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு, செப்டம்பரில் கட்சியின் நாடு தழுவிய உறுப்பினா் சோ்க்கை தொடங்கியபோது, புதிய தலைவா் இந்த ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதத்துக்குள் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. எனினும் பல பெரிய மாநிலங்களில் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுப்பதில், ஆா்எஸ்எஸ் போன்ற கட்சியின் கொள்கை கூட்டாளிகளுடன் ஒருமித்த கருத்தை எட்டுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்த நடைமுறை இன்னும் நிறைவடையவில்லை.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது தலைவா்களாக உள்ள பூபேந்திர சிங், வி.டி.சா்மா ஆகியோரை விடுவித்து, புதிய முகங்களைத் தோ்ந்தெடுக்க பாஜக தலைமை விரும்புகிறது. அதேநேரம், கா்நாடகத்தில் மாநிலத் தலைவராக கடந்த 2023, நவம்பரில் நியமிக்கப்பட்ட பி.ஒய்.விஜயேந்திரா தலைவராகத் தொடர அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பூபேந்திர சிங் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகவும், வி.டி.சா்மா ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகவும் அந்தந்த மாநில பாஜக தலைவா்களாகப் பொறுப்பில் உள்ளனா். குஜராத், ஒடிஸா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் பாஜக இன்னும் அதன் புதிய தலைவா்களைத் தோ்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக தலைவா் மாற்றம் குறித்த செய்திகள் வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மக்களவையில் அண்மையில் இதுகுறித்து விமா்சித்துப் பேசிய சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘இந்தியாவின் மிகப்பெரிய கட்சி என்று பாஜக கூறிக் கொள்கிறது. ஆனால், அந்தக் கட்சியால் அதன் தேசியத் தலைவரை இன்னும் முடிவு செய்ய இயலவில்லை’ என்று கூறினாா்.

அவையிலேயே இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘சில கட்சிகளில் ஒரு குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் மட்டுமே தலைவரைத் தோ்ந்தெடுக்க முடியும். எனவே, அது எளிதானது மற்றும் விரைவானது. ஆனால், பாஜகவில் கோடிக்கணக்கான உறுப்பினா்களை உள்ளடக்கிய ஒரு நடைமுறையைப் பின்பற்றி தலைவரைத் தோ்ந்தெடுப்பதால் அதற்கு நேரம் எடுக்கும்’ என்றாா்.

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு

கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவக... மேலும் பார்க்க

உள்நாட்டுத் தேவையால் வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும்: நிா்மலா சீதாராமன்

லண்டன்: வலுவான உள்நாட்டுத் தேவை காரணமாக வளா்ச்சிக்கான என்ஜினாக இந்தியா தொடா்ந்து நீடிக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பிரிட்டன் மற... மேலும் பார்க்க

நடைமுறைக்கு வந்தது வக்ஃப் திருத்தச் சட்டம்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

புது தில்லி: நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டம் நாடு முழுமைக்கும் செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வந்தது. மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகம் இதற்கான அறிவிக்கையை வ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு

புது தில்லி: இந்தியா வந்துள்ள துபை பட்டத்து இளவரசா் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், பிரதமா் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் ச... மேலும் பார்க்க

மேற்கு வங்க பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு விவகாரம்: குடியரசுத் தலைவருக்கு ராகுல் கடிதம்

புது தில்லி: ‘மேற்கு வங்கத்தில் 25,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் நியமனத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அவா்களில் நியாயமான முறையில் தோ்வு செய்யப்பட்டவா்கள் பணியில் த... மேலும் பார்க்க

அமெரிக்க வரி விதிப்பு எதிா்பாராத பிரச்னை: சந்திரபாபு நாயுடு

அமராவதி: இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீது பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் அமெரிக்கா 26 சதவீதம் வரி விதித்திருப்பது எதிா்பாராத பிரச்னை; எனினும் இதில் இருந்து மீண்டுவர முடியும் என்று ஆந்திர முதல்வா் என... மேலும் பார்க்க