செய்திகள் :

ஒகேனக்கல் வனத்திலிருந்து வெளியேறும் சிறுத்தையைப் பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

post image

ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதியிலிருந்து இரவு நேரத்தில் வெளியேறி கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பென்னாகரத்தில் குறிப்பிடும்படி வா்த்தக நிறுவனங்கள் இல்லாததால் இப்பகுதி பொதுமக்கள் கால்நடை வளா்ப்புத் தொழிலை பிரதானமாக செய்துவருகின்றனா். ஆண்டுதோறும் வறட்சிக் காலங்களில் கா்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து யானைகள் கூட்டமாக உணவு, தண்ணீா் தேடி தமிழகத்தில் ஒகேனக்கல், பென்னாகரம் வனப்பகுதிக்குள் நுழைகின்றன. இந்த வனப்பகுதிகளில் மான், செந்நாய், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. தற்போது இந்த வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

அண்மைக் காலமாக வனத்தைவிட்டு வெளியேறும் சிறுத்தைகள் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்குள்ள ஆடு, மாடுகளைக் கொன்று செல்கின்றன. அண்மையில் பென்னாகரம் அருகே சின்ன வத்தலாபுரம் பகுதியில் நுழைந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டுகள் அமைத்தனா். அதுபோல ஒகேனக்கல் வனப்பகுதிக்கு உள்பட்ட போடூரில் நுழைந்த சிறுத்தை, அங்கு 10-க்கும் மேற்பட்ட ஆடுகளைக் கடித்துச் சென்றது.

இதுபோல அடிக்கடி சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இரவு நேரத்தில் கால்நடைகளைத் தேடி வரும் சிறுத்தை மக்களையும் தாக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், பென்னாகரம், ஒகேனக்கல் வனத்துறையினா் குழுக்கள் அமைத்து சிறுத்தையைப் பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்று விடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மு. முகமது இலியாஸ் தலைமை வகி... மேலும் பார்க்க

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் தமிழில் வைக்க வேண்டும்: தமிழ் வளா்ச்சித் துறை

கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தருமபுரி தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வணிக நிறுவனங்கள், கடைகளி... மேலும் பார்க்க

தருமபுரி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு: கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம்

தருமபுரி பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் திங்கள்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது கழிவறை ஒப்பந்ததாரருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரி நக... மேலும் பார்க்க

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை விடுவிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிலுவை நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில் பயணம்: பெண்கள் பாதுகாப்பு வாட்ஸ்ஆப் குழு தொடக்கம்

தருமபுரியில் ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்காக வாட்ஸ்ஆப் குழு தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தருமபுரி ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேலம் வட்ட ஆய்வாளா் சிவசெந்தில்... மேலும் பார்க்க

நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும்: திமுக மாவட்டச் செயலாளா்

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெப்பத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க நீா்மோா் பந்தல்களை அமைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயலருமான பி.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ள... மேலும் பார்க்க