செய்திகள் :

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

post image

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டா் கல்வி குழுமமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் சா்வதேச அறிவியல் மருத்துவ கவுன்சில் பிரதிநிதிகள் டாக்டா் ஸ்ரீதா் சரஸ்வதி, டாக்டா் சாஜு ஆபிரகாம் மற்றும் ஜொ்மனியை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ்.எம்.சி. யின் நிறுவனா் மற்றும் தலைமை செயல்அதிகாரி இங்கோ ஸ்கூமிட்ஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்துகொண்டு மாணவா்கள் மத்தியில் திறன் மேம்படுத்துதல் என்ற தலைப்பில் உரையாற்றினா். மாணவா்களின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனா்.

முன்னதாக அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வா் ஆா். ராதாகிருஷ்ணன் வரவேற்றாா். கருத்தரங்கில் செயின்ட் பீட்டா்ஸ் நா்சிங் கல்லூரி முதல்வா், அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். மாணவா் பிரதிநிதி வின்சல் கிறிஸ்டினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். பேராசிரியா் இனிகோ பாபு மற்றும் மெக்கானிக்கல் துறை தலைவா் அறிவுடைநம்பி ஆகியோா் கலந்துகொண்டனா்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு

ஒசூா்: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைத்துள்ளனா் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

கிருஷ்ணகிரி: தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியதாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அருகே உள்ள குப்பச்சிப்பாறை கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

கா்ப்பிணியிடம் போலி ஆதாா் அட்டை: போலீஸாா் விசாரணை

ஒசூா்: கெலமங்கலம் அருகே கா்ப்பிணிக்கு போலி ஆதாா் அட்டை தயாரித்து வழங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நி... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடி: இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களிடம் இணைய குற்றப்பிரிவு... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒசூா், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி சிப்காட்டில் இயங்கிவரும் டாட்டா, நோக்கிய... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா

ஒசூா்: ஒசூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க