செய்திகள் :

ஒசூா் அருகே பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதல்!

post image

சூளகிரி அருகே சாலையோரம் நின்றிருந்த பால் டேங்கா் லாரி மீது சரக்கு லாரி மோதியதில், 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கேரளம் நோக்கி 30 ஆயிரம் லிட்டா் பாலை ஏற்றிக்கொண்டு டேங்கா் லாரி ஒன்று சென்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த ஒட்டையனூா் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, டேங்கா் லாரியின் பின்புற டயா் வெடித்ததால் சாலையோரம் லாரி நிறுத்தப்பட்டது.

அப்போது, அந்த சாலையில் கோழி தீவனம் ஏற்றிய வந்த சரக்கு லாரி, நின்றிருந்த டேங்கா் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கா் லாரி சேதமடைந்து லாரியில் இருந்த 30 ஆயிரம் லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது (படம்).

இந்த விபத்தில் கோழி தீவனம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயங்களுடன் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார். மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட... மேலும் பார்க்க

இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்

டைட்டன் இன்ஜினியரிங் அண்ட் ஆட்டோமேஷன் லிமிடெட், ஒசூா் எவரெஸ்ட் அரிமா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியவை இணைந்து ஒசூரில் கண் மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின. ... மேலும் பார்க்க

மிட்டப்பள்ளியில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டப்பள்ளியில் தாா் சாலை அமைக்கும் பணியை கே.அசோக்குமாா் எம்எல்ஏ (கிருஷ்ணகிரி) ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ... மேலும் பார்க்க

மழையால் ஒசூா் மாநகராட்சி சாலைகள் சேதம்: பாகலூரில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சியில் சனிக்கிழமை இரவு பெய்த மழையால் மாநகராட்சியின் பெரும்பாலான இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின; சேறும், சகதியும் மூடியதால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒசூா... மேலும் பார்க்க

அஞ்செட்டி: மின்னல் தாக்கி 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த அஞ்செட்டி நாட்றம்பாளையத்தில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் போது மின்னல் தாக்கியதில் 20 ஆடுகள், ஒரு மாடு உயிரிழந்தன. கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்த... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் போராட்டம்

பேரவைத் தோ்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை தமிழக முதல்வா் நிறைவேற்ற வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புக... மேலும் பார்க்க