செய்திகள் :

ஒடிசா: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியீடு!

post image

கட்டாக்: ஒடிசாவில் கல்வி வாரியம் நடத்திய உயர்நிலைப் பள்ளி சான்றிதழ் தேர்வின் முடிவுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

10 ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீட்டு செயல்முறை முடிவடையும் தருவாயில் இருப்பதாக பிஎஸ்இ தலைவர் ஸ்ரீகாந்த் தாராய் இன்று தெரிவித்தார்.

தேர்வு வினாத்தாள் மதிப்பீடு மார்ச் 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில், இந்த செயல்முறை மூன்று நாட்களுக்கு நிறுத்தப்பட்டதால், தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரம் வெளியிடப்படுவதை உறுதி செய்ய நாங்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருகிறோம்.

அதே வேளயைில், மாணவர்கள் குறிப்பாக உயர் கல்வி நிறுவனங்களில் சேர விரும்புவோரின் கல்வி நலன்களுக்கு வாரியம் முன்னுரிமை அளிக்கிறது.

அறிவியல் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்தவித கவலை கொள்ள தேவையில்லை. தேர்வுக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அறிவியல் விணாத் தாளில் அச்சுப் பிழைகள் இருந்ததாக தெரிவித்த அவர், இந்த ஆண்டு தேர்வில் வாட்டர்மார்க் மற்றும் கியூஆர் குறியீடு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதையும் எடுத்துரைத்தார்.

இந்த ஆண்டு, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 5.5 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முலம் தேர்வு பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்தியுள்ள நிலையில், வினாத்தாள் கசிவு பிரச்சினையை கட்டுப்படுத்தியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,089 புள்ளிகளுடனும், நிஃப்டி 374 புள்ளிகளுடன் நிறைவு!

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க