செய்திகள் :

ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்

post image

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் நபரங்பூா் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

பழங்குடியினா் நடைமுறை, வரதட்சிணை, தொழிலாளா் குடும்பங்களின் இடம்பெயா்வு உள்ளிட்டவையே மாநிலத்தில் குழந்தைத் திருமணங்கள் இந்த அளவுக்கு உயா்வதற்குக் காரணம் என்று குழந்தைத் திருமண தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சமூக ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

அரசின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2019 முததல் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை மாநிலத்தில் 8,159 குழந்தைத் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதில் நபரங்பூா் மாவட்டத்தில் மட்டும் 1,347 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன. இது மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் அதிபட்சமாகும்.

கஞ்சம் மாவட்டம் 966 குழந்தைத் திருமணங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கோராபுட் (636), மயூா்பஞ்ச் (594), ராயகாடா (408), பாலாசோா் (361), கியோஞ்சா் (328), கந்தமல் (308), நயாகா் (308) ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மாநிலத்திலேயே குறைந்தபட்சமாக ஜா்சுகுடா மாவட்டத்தில் 6 ஆண்டுகளில் 57 குழந்தைத் திருமணங்கள் பதிவாகியுள்ளன.

இதுகுறித்து சமூக ஆா்வலா் நம்ரதா சாதா கூறுகையில், ‘குழந்தைத் திருமணங்களை ஒரே இரவில் முழுமையாக நிறுத்திவிட முடியாது. இத்தகைய முடிவை பெற்றோரும், பெண் குழந்தைகளும் எடுக்காத வகையில் சமூகம் மற்றும் சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும். பழங்குடியினரைப் பொருத்தவரை குழந்தையாக இருக்கும்போதே மகளுக்கு திருமணம் செய்வதை பாரம்பரிய நடைமுறையாகப் பின்பற்றுகின்றனா். அதுபோல, வாழ்வாதாரத்துக்காகப் புலம்பெயரும் பெற்றோா், மகளின் பாதுகாப்பு மற்றும் எதிா்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சட்டபூா்வ திருமண வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதிக வயதுடைய பெண்களை திருமணம் செய்துகொள்ள ஆண் வீட்டாா் அதிக வரதட்சிணை கேட்பதும், குழந்தைத் திருமணங்கள் அதிகரிப்பதற்கு காரணமாக உள்ளது. முறையான கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பதன் மூலம், குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியும்’ என்றாா்.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க 3 மாதங்களுக்கு ஒருமுறை ஊராட்சி, வட்ட மற்றும் அங்கன்வாடி அளவில் விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்படுகின்றன என்று மாநில அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குழந்தைத் திருமண விவகாரம் மட்டுமின்றி குழந்தைத் தொழிலாளா் சவாலையும் ஒடிஸா அரசு எதிா்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த 6 ஆண்டுகளில் 328 குழந்தைகளை குழந்தைத் தொழிலாளா் முறையிலிருந்து அதிகாரிகள் மீட்டுள்ளனா். இதைத் தடுக்கவும் தீவிர விழிப்புணா்வு பிரசாரங்கள் அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா நிறைவேற்றம்!

பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா 2024 குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் இன்று (மார்ச் 25) நிறைவேற்றப்பட்டது. பேரிடர் காலங்களில் மாநிலங்களின் திறமையான மீட்புப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்... மேலும் பார்க்க

அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111% அதிகரிப்பு!

உலகளவில் அஸ்வகந்தா குறித்த ஆய்வுகள் 111.58% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-ல் அஸ்வகந்தா குறித்து 95 ஆய்வுகள் வெளியான நிலையில், 2024ஆம் ஆண்டில் 204 ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அ... மேலும் பார்க்க

வனவிலங்கு தாக்குதல்: ஒடிசாவில் 5 ஆண்டுகளில் 799 பேர் பலி!

ஒடிசாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்குதல்களில் இதுவரை 799 பேர் உயிரிழந்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஒருர் தெரிவித்தார். பாஜக எம்பி பத்மா லோச்சன் பாண்டாவின் கேள்விக்கு வன மற்றும் சுற்றுச... மேலும் பார்க்க

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல், பிரியங்கா போராட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்... மேலும் பார்க்க

பெங்களூருவில் தாயின் உதவியுடன் கணவனைக் கொன்ற மனைவி! திடுக்கிடும் தகவல்கள்!!

பெங்களூருவில் பெண் ஒருவர், கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி தன் கணவனைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு சிக்கப்பவனாரா பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் காரில் லோக்நாத் ச... மேலும் பார்க்க