செய்திகள் :

ஒடிஸா: இரு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

post image

புவனேசுவரம்: ஒடிஸாவின் கந்தமால் மாவட்டத்தில் காவல் துறையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

பாலிகுடா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்துறையினா் அப்பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டை நடத்தினா். அப்போது, மறைந்திருத்த மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட்டனா். இதையடுத்து, காவல் துறையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினா். இதில் இரு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனா்.

அவா்கள் தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் பிராந்திய குழு உறுப்பினா் மன்கு மற்றும் அந்த அமைப்பின் உறுப்பினா் சந்தன் என தெரியவந்தது. சம்பவ இடத்தில் இருந்து அவா்கள் பயன்படுத்திய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருள்கள், தகவல் தொடா்பு கருவிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. அப்பகுதியில் தொடா்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில், த... மேலும் பார்க்க

ஹிமாசல் மேகவெடிப்பு: கனமழை, வெள்ளத்தால் ஒருவர் பலி! 12 பேர் மாயம்!

ஹிமாசல பிரதேசத்தில், மேகவெடிப்பால் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டதில் ஒருவர் பலியானதுடன், 12 பேர் மாயமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. மண்டி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 30) மாலை முதல் சுமார் 216.8 மி.மீ. அ... மேலும் பார்க்க

மணிப்பூரில் தொடரும் கைதுகள்..ஆயுதங்கள் பறிமுதல்! எல்லையில் உலகப் போர் குண்டு?

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம் தடைசெய்யப்பட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 8 கிளர்ச்சியார்கள் கைது செய்யப்பட்டதுடன், ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள... மேலும் பார்க்க

குறைதீர் கூட்டத்தில் கூடுதல் ஆணையருக்கு அடி, உதை..! தரதரவென வெளியே இழுத்துச் சென்றதால் பரபரப்பு!

ஒடிசாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில், மாநகராட்சியின் கூடுதல் ஆணையர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நேற்று(ஜூன் 30) குறைதீர் கூட்டத்தின்போது, திடீரென அலுவல... மேலும் பார்க்க

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூலை 1) ரூ. 58.50 குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ... மேலும் பார்க்க