செய்திகள் :

தெலங்கானா பாஜக தலைவராக ராம்சந்தர் ராவ் நியமனம்!

post image

தெலங்கானா மாநிலப் பிரிவின் தலைவராக என். ராம்சந்தர் ராவை பாஜகவின் தேசியத் தலைமை நியமித்துள்ளதாகக் கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பாஜக வெளியிட்ட அறிக்கையில்,

தெலங்கானாவில் கட்சியின் சித்தாந்த மற்றும் நிறுவன அடித்தளத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டிக்குப் பிறகு, ராம்சந்தர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்கும், மாநிலத்தில் அடிமட்ட தொடர்பை வலுப்படுத்துவதற்கும் உள்ள தெளிவான நோக்கத்தைக் குறிக்கிறது.

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் மூத்த தலைவரான ராமசந்தர் ராவ், சித்தாந்த தெளிவு, சட்ட நுண்ணறிவு மற்றும் பல ஆண்டுக்கால அரசியல் அனுபவம் கொண்டவராவார். பாஜகவில் ராவ் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார், அவற்றில் பிஜேஒய்எம் செயலாளர், நகரப் பிரிவு துணைத் தலைவர், சட்டப் பிரிவின் மாநில ஒருங்கிணைப்பாளர், தேசிய சட்டப் பிரிவு உறுப்பினர், மாநில பொதுச் செயலாளர் மற்றும் கட்சி செய்தித் தொடர்பாளர் ஆகிய பதவிகள் அடங்குவர்.

பாஜக தெலங்கானா பிரிவு தேசியத் தலைமை, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் முடிவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தது.

ராம்சந்தர் ராவ் தலைமையில், கட்சி புதிய மைல்கல்லை எட்டவும், தெலங்கானா மக்களுடனான தொடர்பை ஆழப்படுத்தவும் நம்பிக்கை கொண்டுள்ளது என்று பாஜக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதை பிறந்த இடத்தின் வளர்ச்சிக்கு ரூ.883 கோடி! பிகார் அமைச்சரவை ஒப்புதல்!

பிகார் மாநிலத்தில், சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படும், சீதாமார்ஹி மாவட்டத்திலுள்ள புனித தலங்களின் மேம்பாட்டிற்காக ரூ.882.87 கோடி அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய... மேலும் பார்க்க

டி.கே. சிவக்குமாரை முதல்வராக்கவில்லை என்றால்... கர்நாடக எம்எல்ஏவின் பரபரப்பு பேட்டி!

கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து துணை முதல்வர் சிவக்குமாரின் ஆதரவாளரும் ராமநகர் எம்.எல்.ஏ.வுமான இக்பால் உசேன் அளித்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்ச... மேலும் பார்க்க

140 கோடி இந்தியர்களின் முயற்சியில் டிஜிட்டல் இந்தியா முன்னேற்றம்: பிரதமர்

டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து இந்நாள் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைத்தளமான லிங்கட்இனில் பதிவு ஒன்ற... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: 42 ஆக உயர்ந்த பலி!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டைய... மேலும் பார்க்க

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர்... மேலும் பார்க்க

ம.பியில் வழக்கத்தை விட அதிக மழை..! 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

மத்தியப் பிரதேசத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களுக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பருமழை தொடங்கியது முதல்,... மேலும் பார்க்க