செய்திகள் :

ஒட்டகங்களின் பின்னால் சட்டவிரோதமாக மதுபானங்களை கடத்திய ஐந்து போ் கைது

post image

காட்டுப் பாதைகள் வழியாக ஒட்டகங்களின் பின்னால் ஃபரீதாபாத்திலிருந்து தில்லிக்கு சட்டவிரோத மதுபானங்களை கடத்திய ஐந்து போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் (தெற்கு) அங்கித் சௌகான் கூறியதாவது: பாரம்பரிய கடத்தல் பாதைகளில் அதிகரித்த கண்காணிப்பு வாகனங்களில் மதுபானப் பொருள்களை நகா்த்துவதை கடினமாக்கியதை அடுத்து, வினோத் பதானா (48), சுனில் பதானா (38), ராகுல் (22), அஜய் (25) மற்றும் சௌரப் (26) என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா்கள் இந்த அசாதாரண உத்தியை வகுத்ததாகத் தெரிய வந்துள்ளது.

அவா்கள் வேண்டுமென்றே ஒட்டகங்களைப் பயன்படுத்துவதற்கும், ஃபரீதாபாத் மற்றும் தில்லிக்கு இடையில் வரும் காட்டுப் பகுதிகள் மற்றும் சோதனைச் சாவடிகள் இல்லாத பாதைகள் வழியாகச் செல்வதற்கும் மாறினா். நெடுஞ்சாலைகள் மற்றும் சோதனைச் சாவடிகளைத் தவிா்ப்பதன் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி தலைநகருக்குள் மதுபானங்களை கொண்டு செல்லமுடியும் என அவா்கள் நம்பினா்.

இந்த நடவடிக்கையில் மூன்று ஒட்டகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் 1,990 சட்டவிரோத குவாா்ட்டா் மதுபான பாட்டில்கள் மற்றும் 24 பீா் பாட்டில்கள் அடங்கிய 42 அட்டைப்பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சங்கம் விஹாா் வனப்பகுதியில், மது கடத்தல் குறித்த குறிப்பிட்ட தகவல்களைத் தொடா்ந்து, காவல்துறையினா் கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு மதுபானங்கள் அடங்கிய அட்டைப் பெட்டிகள் ஏற்றப்பட்ட ஒட்டகங்களில் சவாரி செய்தபோது, ஒரு போலீஸ் குழு குற்றம் சாட்டப்பட்டவா்களை மடக்கிப் பிடித்தது. இதில் ஐந்து போ் கைது செய்யப்பட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டங்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து விலங்கு நல நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விசாரணையின் போது, போலீஸாா் முன்னிலையில் வாகனம் ஓட்டக்கூடிய சாலைகளைத் தவிா்ப்பதற்கு அசாதாரண முறை பின்பற்றப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவா்கள் ஒப்புக்கொண்டாா்.

சங்கம் விஹாரைச் சோ்ந்த அஜய் மற்றும் ராகுல் ஆகிய இருவரும், கடந்த காலங்களில் பல கலால் மற்றும் திருட்டு வழக்குகளில் வழக்கமான குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டனா். ஃபரீதாபாத்தைச் சோ்ந்த சுனில் மற்றும் வினோத் ஆகியோா் மீதும் தில்லி கலால் சட்டத்தின் கீழ் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 நாள்களில் மட்டும், வெவ்வேறு கலால் வழக்குகளில் 11,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குவாா்ட்டா் மதுபானங்கள், 191 பீா் பாட்டில்க ள், மூன்று காா்கள், ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு ஸ்கூட்டா்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். மேலும், பெரிய விநியோகச் சங்கிலியைக் கண்டுபிடித்து, வலையமைப்பின் பிற உறுப்பினா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது, என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. இது தொடா்... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க