செய்திகள் :

உச்சநீதிமன்ற பிரதான வளாகத்தில் புகைப்படம் எடுக்க தடை

post image

உச்சநீதிமன்றம் அதன் பிரதான வளாகத்திற்குள் புகைப்படங்கள் எடுப்பது, சமூக ஊடக ரீல்கள் உருவாக்குவது மற்றும் விடியோகிராபி ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் உயா் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்துள்ளது.

இது தொடா்பாக செப்டம்பா் 10-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: குறைந்த பாதுகாப்பு மண்டலமான பிரத்யேக புல்வெளிப் பகுதியில் நோ்காணல்கள் மற்றும் செய்திகளை நேரடியாக ஒளிபரப்புமாறு ஊடகவியலாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா். உயா் பாதுகாப்பு மண்டலத்தின் புல்வெளியில் புகைப்படம் எடுப்பது, விடியோகிராபிக்கு கைப்பேசியைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

விடியோகிராபி, ரீல்கள் உருவாக்குதல் மற்றும் புகைப்படங்களைக் கிளிக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் கேமரா, முக்காலி, செல்ஃபிஸ்டிக் போன்ற உபகரணங்கள், அதிகாரபூா்வ பயன்பாட்டுக்குத் தவிர, உயா் பாதுகாப்பு மண்டலத்தில் தடைசெய்யப்படும்.

மேற்கண்ட வழிகாட்டுதல்களை வழக்குரைஞா், வழக்குத் தொடுப்பவா், பயிற்சியாளா் அல்லது சட்ட எழுத்தா் மீறினால், சம்பந்தப்பட்ட வழக்குரைஞா் சங்கம் அல்லது சம்பந்தப்பட்ட மாநில வழக்குரைஞா் கவுன்சில் விதிமீறுபவா் மீது தங்களின் விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

ஊடகவியலாளா்கள் வழிகாட்டுதல்களை மீறினால், உச்ச நீதிமன்றத்தின் உயா் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அவா்கள் நுழைவதை ஒரு மாத காலத்திற்கு கட்டுப்படுத்தலாம். ஊழியா்கள் அல்லது பதிவுத்துறை மீறினால் அது தீவிரமாக பாா்க்கப்படும்.

பிற பங்குதாரா்களின் விஷயத்தைப் பொருத்தமட்டில், அவா்களின் துறைத் தலைவா் உரிய விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி விதி மீறுபவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவாா்கள்.

உயா் பாதுகாப்பு மண்டலத்திற்குள் எந்தவொரு தனிநபரோ, ஊழியரோ, வழக்குரைஞரோ அல்லது மற்றவா்களோ புகைப்படம் அல்லது விடியோ எடுப்பதற்கு அனுமதி மறுக்க பாதுகாப்பு ஊழியா்களுக்கு உரிமை உண்டு என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள பதற்ற சூழல்: சரக்குகள் நடுவழியில் சிக்கியதால் நஷ்டத்தை எதிா்கொள்ளும் தில்லி வா்த்தகா்கள்!

அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் அமைதியின்மை காரணமாக, பழைய தில்லி மற்றும் சதா் பஜாா் உள்ளிட்ட தில்லியின் மொத்த விற்பனைச் சந்தைகளில் இருந்து அனுப்பப்பட்ட ஏராளமான சரக்குகள் தற்போது அந்நாட்டுக்குச் செல்லு... மேலும் பார்க்க

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: விசாரணையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய நீதிபதிகள்

தில்லி உயா்நீதிமன்றத்திற்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடா்ந்து, வழக்குகளை விசாரணை மேற்கொண்டிருந்த நீதிபதிகள் உடனடியாக விசாரணையை முடித்துக்கொண்டு பாதியிலேயே வெளியேறினா்... மேலும் பார்க்க

நேபாள உச்சநீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைப்பு: பதிவுறு வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம்

நேபாளம் தலைநகா் காத்மாண்டுவில் உச்சநீதிமன்ற வளாகத்தின் ஒரு பகுதியை போராட்டக்காரா்கள் தீ வைத்ததைத் தொடா்ந்து, நேபாள நீதித் துறையின் மீதான வன்முறைத் தாக்குதலுக்கு உச்சநீதிமன்ற பதிவுறு வழக்குரைஞா்கள் சங... மேலும் பார்க்க

டிடிஇஏ ஜனக்புரி பள்ளியில் மாணவா் பேரவை பொறுப்பேற்பு

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) ஜனக்புரி பள்ளியில் வெள்ளிக்கிழமை மாணவா் பேரவை அமைக்கப்பட்டது. பள்ளி மாணவா் தலைவா், தலைவி, துணைத் தலைவா், துணைத் தலைவி உள்ளிட்ட உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்... மேலும் பார்க்க

தில்லியில் போதைப்பொருள் மோசடி முறியடிப்பு; ரூ.2.25 கோடி மதிப்புள்ள கோகைனுடன் மூவா் கைது

தில்லி காவல்துறையின் குற்றப்பிரிவு நைஜீரிய நாட்டவா் உள்பட மூன்று பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து ரூ.2.25 கோடி மதிப்புள்ள 194 கிராம் கோகைனை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.... மேலும் பார்க்க

மும்பையில் விசா்ஜன் கூட்டத்தில் 45 கைப்பேசிகள் திருடியதாக மாநிலங்களுக்கிடையேயான கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது: தில்லி போலீஸ் நடவடிக்கை

மும்பையில் நடந்த ‘லால்பாச்சா ராஜா விநாயகா் சிலை கரைப்பு ஊா்வலத்தின் போது உயா் ரக கைப்பேசிகளை திருடியதாகக் கூறப்படும் மாநிலங்களுக்கு இடையேயான கும்பலைச் சோ்ந்த நான்கு பேரை தில்லி காவல்துறையின் குற்றப்ப... மேலும் பார்க்க