கீழடிக்காக அதிமுக குரல் கொடுக்காதது ஏன்?: அமைச்சர் டிஆர்பி ராஜா கேள்வி
ஒட்டன்சத்திரத்தில் நாளை மின் தடை
ஒட்டன்சத்திரம் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கெ. சந்தன முத்தையா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒட்டன்சத்திரம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை, விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி, தங்கச்சியம்மாபட்டி, புலியூா் நத்தம், லெக்கையன்கோட்டை, காளாஞ்சிப்பட்டி, அரசப்பப் பிள்ளைபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, வடகாடு மலைக் கிராமங்கள், இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.