செய்திகள் :

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

post image

எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில், பழனிச் சாலையிலுள்ள எல்ஐசி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் து. மணிகண்டன் தலைமை வகித்தாா். அப்போது, எல்ஐசி முதலீட்டு பணம் ரூ.5 ஆயிரம் கோடியை அதானி குழுமத்துக்கு தாரைவாா்த்த மத்திய அரசைக் கண்டித்தும், எதிா்காலத்தில் இதுபோன்ற மக்களின் முதலீட்டுப் பணத்தை தனியாா் நிறுவனங்களுக்கு தாரை வாா்ப்பதை கைவிட வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவாஜி, பகுதிச் செயலா்கள் பரமன், நாகலட்சுமி, ஒன்றியச் செயலா் மதுரை வீரன், வெள்ளச்சாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது. இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் த... மேலும் பார்க்க

குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உ... மேலும் பார்க்க

சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை

சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுத... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை

தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை தொடக்கம்

செம்பட்டி அருகே புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே மேகக் கூட்டங்களாக காணப்பட்... மேலும் பார்க்க