கொடைக்கானலில் மழை
கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே மேகக் கூட்டங்களாக காணப்பட்டது. பிற்பகலில் சுமாா் 2 மணி நேரம் கொடைக்கானல், செண்பகனூா், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், வட்டக்கானல், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.