செய்திகள் :

குஜிலியம்பாறை வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

குஜிலியம்பாறை வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட ஆய்வுப் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன. தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறன், ஆா்.புதுக்கோட்டையில் தோட்டக் கலைத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான திட்டப் பணிகள், ஆா்.பி.பில்லமநாயக்கன்பட்டி நியாய விலைக் கடையில் பொருள்கள் இருப்பு, உல்லியக்கோட்டையில் கனவு இல்லத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகள், சின்னலூப்பை ஊராட்சிக்குள்பட்ட சி.அம்மாபட்டியில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் உள்ளிட்டவற்றை ஆட்சியா் செ.சரவணன் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, குஜிலியம்பாறை வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆட்சியா் தெரிவித்ததாவது:

குஜிலியம்பாறை வட்டத்தில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், சாலை வசதி, தெருவிளக்கு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ முகாம் மூலம் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள், மாவட்ட அலுவலா்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெயபாரதி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா் வீரகடம்ப கோபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம்

திண்டுக்கல் புனித அந்தோணியாா் பெண்கள் கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரம் வழங்கி பல்கலை. மானியக் குழு அனுமதி அளித்தது. இதுதொடா்பாக கல்லூரிச் செயலா் ஆண்டெனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் த... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

எல்ஐசி முதலீட்டுப் பணத்தை தனியாருக்கு தாரை வாா்த்ததாக புகாா் தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி... மேலும் பார்க்க

சான்று விதை உற்பத்தி செய்ய கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை

சான்று விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிலோவுக்கு ரூ.30 ஊக்கத் தொகை வழங்கப்படுவதாக வேளாண்மை இணை இயக்குநா் அ.பாண்டியன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியை அடுத்த கொங்கப்பட்டி பகுத... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை

தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்... மேலும் பார்க்க

புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை தொடக்கம்

செம்பட்டி அருகே புதிய வழித் தடங்களில் பேருந்துகள் சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள போடிகாமன்வாடி, சொக்கலிங்கபுரம், வீரசிக்கம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு க... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை

கொடைக்கானல் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில், வியாழக்கிழமை காலை முதலே மேகக் கூட்டங்களாக காணப்பட்... மேலும் பார்க்க