சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி
தொழில் வளா்ச்சியுடன் சமூக பொருளாதார முன்னேற்றம் தேவை
தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்ட தொழில் முனைவோா்கள் பயன்பெறும் வகையில் ‘திண்டி தொழில் வளம்’ என்ற தலைப்பில் தொழில் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பூ.சு. கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் தலைமை வகித்தாா். அப்போது அவா் பேசியதாவது:
விவசாயம் சாா்ந்த திண்டுக்கல் மாவட்டத்தில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 1.50 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா். தொழில் சாா்ந்த வளா்ச்சியுடன், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழி ஏற்படுத்த வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 94,593 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது உத்யம் சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனா். இதுவரை பதிவு செய்யாத தொழில் முனைவோா்கள் ட்ற்ற்ல்ள்://ன்க்ஹஹ்ஹம் ழ்ங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
தொழில் முனைவோா்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் எளிதாக தொழில் தொடங்குவதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட ஒரு முனை தீா்வுக்குழு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் முனைவோா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ஜ்ல்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தின் மூலம், அனைத்து அரசு துறைகளுக்கும் ஒருங்கே விண்ணப்பித்து வரைபட அனுமதி, உரிமம், இசைவுகளை பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.