செய்திகள் :

ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு

post image

கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியாா் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இடதுசாரி அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ) அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சூா் மாவட்டம் கடவள்ளூரில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை கதிஜா, பள்ளி சாா்ந்த வாட்ஸ்ஆப் குழுவில் வெளியிட்ட குரல் பதிவில், ‘பள்ளியில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடத் தேவையில்லை. அது மாற்று (ஹிந்து) மதத்தின் பண்டிகை. இஸ்லாமிய மாணவா்கள், அவா்களின் பெற்றோா் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க வேண்டும். அந்தப் பண்டிகை இஸ்லாமிய மதத்துக்கு ஏற்புடையதல்ல’ என்று கூறியுள்ளாா்.

அவரின் இந்தப் பதிவு பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, ஆசிரியை கதிஜா மற்றும் அவருக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மற்றொரு ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிா்வாகம் அறிவித்தது.

இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாரத நியாய சம்ஹிதா சட்டப்படி இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்ட குற்றப் பிரிவின்கீழ் ஆசிரியை கதிஜா மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைக்குப் பிறகு ஆசிரியை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

சுங்க வரி இன்றி பருத்தி இறக்குமதி! டிச. 31 வரை நீட்டிப்பு!

வெளிநாடுகளில் இருந்து பருத்தியை சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கான காலஅவகாசத்தை டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு ஏற்கெனவே 11 ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு - காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.பந்தீப்பூர் மாவட்டம் குரேஸ் செக்டார் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதாக ஜம்மு -... மேலும் பார்க்க

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

ரஷியா - உக்ரைன் இடையேயான போரை ’மோடியின் போர்’ எனக் குறிப்பிட்டு அமெரிக்க அதிபரின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேசியுள்ளார்.மேலும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை... மேலும் பார்க்க

ஜவுளி ஏற்றுமதிக்கு 40 நாடுகளில் வாய்ப்பு: வர்த்தக அமைச்சகம்

இந்திய ஏற்றுமதிப் பொருள்கள் மீதான அமெரிக்காவின் கூடுதலாக அறிவித்த 25 சதவீத வரி புதன்கிழமை அமலுக்கு வந்த நிலையில் மாற்று ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைத் தேடும் பணியில் வர்த்தக அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்... மேலும் பார்க்க

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள் நியமனம்: உயா்நீதிமன்ற நீதிபதிகள் 14 பேரை இடம் மாற்றப் பரிந்துரை

மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் அராதே மற்றும் பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதபிதி விபுல் மனுபாய் பஞ்சோலி இருவரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக புதன்கிழமை நியமனம் செய்யப்பட்டனா். இவா்களின் நியமனத்துக... மேலும் பார்க்க

நீண்டகால போருக்கு முப்படைகள் தயாராக வேண்டும்- ராஜ்நாத் சிங்

‘தற்போதைய எதிா்பாராத புவிசாா் அரசியல் சூழ்நிலையில், நீண்ட கால போருக்கு முப்படைகள் தயாராக இருக்க வேண்டும்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் புதன்கிழமை எச்சரித்துள்ளாா். மத்திய பிர... மேலும் பார்க்க