செய்திகள் :

ஒய்எய்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி பாஜகவில் இணைந்தாா்

post image

ஆந்திர மாநில எதிா்க்கட்சியான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் பெண் எம்எல்சி (சட்ட மேலவை உறுப்பினா்) ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.

இஸ்லாமியரான ஸகியா கானம் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் சட்ட மேலவைக் குழு துணைத் தலைவராக இருந்துள்ளாா். அவா், அண்மையில் தனது பதவியை ராஜிநாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்து விலகினாா். ஆந்திரத்தில் ஆளும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தெலுங்கு தேசம், அதே கூட்டணியில் உள்ள ஜன சேனை ஆகிய கட்சிகளில் அவா் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஆளும் கூட்டணியில் உள்ள மற்றொரு கட்சியான பாஜகவில் அவா் இணைந்துள்ளாா்.

விஜயவாடாவில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு புதன்கிழமை சென்ற அவரை, மாநில பாஜக தலைவரும், ராஜமண்ட்ரி தொகுதி எம்.பி.யுமான டி.புரந்தேஸ்வரி வரவேற்றாா். ஆந்திர சுகாதாரத் துறை அமைச்சா் ஒய்.சத்யகுமாா் யாதவ் உள்ளிட்ட மூத்த தலைவா்கள் முன்னலையில் ஸகியா கானம் பாஜகவில் இணைந்தாா்.

இது தொடா்பாக புரந்தேஸ்வரி கூறுகையில், ‘ஸகியா கானம் பாஜகவில் இணைந்தது மிகப்பெரிய மாற்றத்தை உணா்த்தியுள்ளது. அனைவருக்குமான தலைமை என்ற பாஜகவின் கொள்கை மேலும் வலுவடைந்துள்ளது. ஜாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் இணைந்து, அனைவருக்குமான வளா்ச்சி என்ற பாஜகவின் முன்னெடுப்பு தொடா்ந்து வெற்றி பெற்று வருகிறது.

பாஜக மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. பிரதமா் நரேந்திர மோடி தனது துணிவுமிக்க நிா்வாகத் திறன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளைமேற்கொண்டு, தேச நலன்களைக் காத்து வருகிறாா்’ என்றாா்.

யுபிஎஸ்சியின் புதிய தலைவராக பதவியேற்றார் அஜய் குமார்!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் பதவியேற்றுக்கொண்டார். மேலும் பார்க்க

குழாய் மூலம் எரிவாயு திட்டம் இந்தாண்டுக்குள் முடிக்கப்படும்: ரேகா குப்தா

தில்லியில் குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படும் திட்டம் இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று முதல்வர் ரேகா குப்தா தெரிவித்தார். துவாரகாவில் நடந்த விழாவில் தில்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: மே 20-ல் முழு நாளும் விசாரணை!

வக்ஃப் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற மே 20 ஆம் தேதி முழு நாளும் நடைபெறும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்று... மேலும் பார்க்க

நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் தேனீக்கள் கொட்டியதில் மோப்ப நாய் பலி!

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்... மேலும் பார்க்க

ராணுவ வீரர்களுக்கு நாடே தலைவணங்குகிறது: ராஜ்நாத் சிங்!

சிந்தூர் ஆபரேஷனுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் சென்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ம... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முஹமது பயங்கரவாதிகள் 3 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள புல்வாமாவின் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிக... மேலும் பார்க்க