செய்திகள் :

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

post image

மத்திய பிரதேசத்தில் ஆசிரியர் மீது எரிக்க முயன்ற மாணவர் கைது செய்யப்பட்டார்.

மத்திய பிரதேசம் மாநிலம், நரசிங்கபுரம் மாவட்டத்தில் சூர்யான்ஷ் கோச்சார் (18) என்ற மாணவர், தனது பள்ளியில் பணியாற்றிய 26 வயதுடைய ஆசிரியரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.

இருப்பினும், கோச்சாரின் பள்ளியில் இருந்து ஆசிரியர் 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே விலகியபோதிலும், கோச்சாருக்கும் ஆசிரியருக்கும் இடையே பேச்சுவார்த்தை இருந்துள்ளது.

இந்த நிலையில், சுதந்திர தினத்தன்று, ஆசிரியர் கட்டியிருந்த சேலை குறித்து தகாத முறையில் கோச்சார் விமர்சித்துள்ளார். இதனையடுத்து, மாணவரின் மீது ஆசிரியர் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, ஆசிரியரை பழிவாங்கும் நோக்கில் திங்கள்கிழமையில் அவரின் வீட்டுக்குச் சென்ற மாணவர், தன்னுடன் எடுத்துச் சென்ற பெட்ரோலை, ஆசிரியர் மீது ஊற்றி, பற்ற வைத்துவிட்டு, சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.

இருப்பினும், ஆசிரியரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரின் உடலில் 10 முதல் 15 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டு, மோசமான நிலையில் உள்ளபோதிலும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தப்பியோடிய கோச்சாரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்குப்பதிவு செய்து, விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

Student Pours Petrol On Teacher, Sets Her On Fire

அமெரிக்காவின் வரிவிதிப்பு! இந்தியாவுக்கு ரூ.4.19 லட்சம் கோடி பாதிப்பு!

அமெரிக்காவின் வரிவிதிப்பால், இந்தியாவில் 48 பில்லியன் டாலர் மதிப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.பரஸ்பர வரி மற்றும் ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாகக் கூறி, இந்தியா மீது 50 சதவி... மேலும் பார்க்க

உ.பி.யில் ஜலாலாபாத் ஊரின் பெயரை பரசுராம்புரி என மாற்றிய மத்திய அரசு!

உத்தரப் பிரதேசத்திலுள்ள ஜலாலாபாத் என்ற ஊரின் பெயர் பரசுராம்புரி என இன்று (ஆக. 20) பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெயரை மாற்ற வலியுறுத்தி, மத்திய உள் துறை அமைச்சகத்துக்கு உத்தரப் பிரதேச மாநில தலைமைச்... மேலும் பார்க்க

சத்தீஸ்கர்: ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 8 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், கூட்டாக ரூ.30 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த 8 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். நாராயணப்பூர் மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்... மேலும் பார்க்க

பின்னோக்கிச் செல்கிறது இந்தியா: ராகுல் விமர்சனம்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாக்கள், இந்தியா பின்நோக்கிச் சென்றுகொண்டிருப்பதைக் குறிப்பதாக காங்கிரஸ் மக்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள், முதல்வர்க... மேலும் பார்க்க

இந்திய கால்பந்து அணிக்குத் தேர்வான ராணுவ வீரர்..!

இந்திய கால்பந்து அணியில் இந்திய ராணுவ வீரர் சுனில் பெஞ்சமின் தேர்வாகியுள்ளார். இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் காலித் ஜமில் தைரியமான முடிவுகளை எடுப்பவராக இருப்பதாக பலரும் பாராட்டு தெரிவித்... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு! பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

காஷ்மீரில் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை வன்முறைகள் தண்டனையாக பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.போர் சூழலுக்கு மத்தியில் பாலியல் வன்முறை... மேலும் பார்க்க