செய்திகள் :

ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் சர்மா நீக்கமா?

post image

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இளம் வீரர் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர் வருகிற 20 ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாமல் புதிய அணியின் திறனை சோதிக்கும் பலபரீட்சையாகவே இந்தத் தொடர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டெஸ்ட் அணியில் இருந்து திடீர் ஓய்வுபெற்ற இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் ரோஹித் சர்மாவை பதவியிலிருந்து நீக்க பிசிசிஐ முடிவெடுத்திருப்பதாக நம்பத்தகுந்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

ரோஹித் சர்மாவின் ஃபார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், மூன்று வடிவங்களுக்கும் வெவ்வேறு கேப்டன்களை வைத்துக் கொள்ளாமல் இருக்கவும், டி20 அணிக்கு சூர்யகுமார் தலைமையிலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியை இளம் வீரர் ஷுப்மன் கில்லிடமும் ஒப்படைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹித் சர்மா சாம்பியன்ஸ் டிராபியை வென்றுகொடுத்தவுடன் ஓய்வுபெற்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரின் ஓய்வு முடிவு தாமதம், அணித் தேர்வர்களுக்கு புதிய தலைவலியாக உருவாகியுள்ளது. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்குப் பின்னரே அவர் ஓய்வுபெறுவார் என ரசிகர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.

ரோஹித் சர்மாவின் ஓய்வு முடிவு குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாகவும், ஆனால், அவரின் கேப்டன் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லையென பிசிசிஐயின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் இந்திய அணியை வழிநடத்தி வந்தனர். தற்போது சூர்யகுமார் டி20 அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அதேநேரத்தில் டெஸ்ட் துணை கேப்டனான ரிஷப் பந்த் மற்றும் கேப்டன் கில் இருவருமே டி20 அணியில் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்திய அணிக்கு 12 ஒருநாள் போட்டிகள் இருக்கின்றன. இந்தப் போட்டிகளில் ரோஹித் சர்மா தலைமை தாங்குவாரா? அல்லது அணியிலிருந்து நீக்கப்படுவரா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அவர் கூறும்போது, “ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை. இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை. எதிர்காலத்தில் எந்த வதந்திகளும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே.

நான் இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால், நான் இன்னும் ஒரு வடிவத்தில் விளையாடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால், அவர் அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு வீரராக தொடருவாரா? அல்லது ஒருநாள் போட்டிகளிலும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

இதையும் படிக்க: விற்கப்படுகிறதா ஆர்சிபி..? ரூ.16,800 கோடிக்கு கைமாற்ற திட்டமிடும் உரிமையாளர்கள்?!

டபிள்யூடிசி இறுதிப்போட்டி: காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் விலகல்; மே.இ.தீவுகள் தொடரில் விளையாடுவாரா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டி: மார்க்ரம் அரைசதம்; நிதானமாக இலக்கை நெருங்கும் தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிதானமாக இலக்கை நெருங்கி வருகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அரைசதம் விளாசி வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் லார்ட்ஸ் திடலில் உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்; அணியின் நலனை பாதிக்குமா?

ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக மெ... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்... மேலும் பார்க்க

ஸ்டார்க் அரைசதம்: டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு!

டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.லண்டனில் நடைபெற்று வரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது... மேலும் பார்க்க