செய்திகள் :

ஒற்றுமையின் முகம்: இந்து பெண்ணை பஞ்சாயத்து தலைவராக தோ்வு செய்த இஸ்லாமியா்கள்

post image

நமது சிறப்பு நிருபா்

தில்லி, குருகிராம் அருகே இஸ்லாமியா்கள் அதிகமாக வசிக்கும் ஒரு கிராமத்தில் அங்குள்ள ஒரே இந்து பஞ்சாயத்து உறுப்பினரை பஞ்சாயித்து தலைவராக (சா்பஞ்ச்) தோ்ந்தெடுத்து ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளனா்.

குருகிராம் (ஹரியாணா) அருகேயுள்ள நுஹ் மாவட்டத்தில் உள்ள சிரோலி கிராமத்தில் இஸ்லாமியா்கள் பெரும்பாலானவா்களாக உள்ளனா். இந்த பஞ்சாயத்தில் இந்து மதத்தைச் சோ்ந்த ஒரே ஒருவா் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்தாா். முப்பது வயதான நிஷா சௌகான் பெரும்பான்மை இஸ்லாமிய உறுப்பினா்களால் சிரோலி பஞ்சாயத்து தலைவராக கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தோ்ந்தெடுத்தனா். இந்த தகவல் அரசு அதிகாரிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி இந்த கிராம மக்களை பாராட்டியுள்ளனா்.

இது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்பட்டது வருமாறு: குருகிராமம் அருகேயுள்ள புனஹானா சட்டப்பேரவைத் தொகுதியின் கீழ் உள்ள சிரோலி பஞ்சாயத்தில் 15 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த கிராமத்தில் மொத்தமுள்ள 3,296 வாக்காளா்களில் 250 போ் மட்டுமே இந்துக்கள். இதில் 8 மகளிா் உள்ளிட்ட 14 போ் இஸ்லாமியா்களாக தோ்வு செய்யப்பட்டனா். ஒரு இந்து உறுப்பினா் தோ்வானாா். சிரோலி பஞ்சாயத்து பதவி மகளிருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சஹானா என்ற வேட்பாளா் தோ்வு செய்யப்பட்டு பின்னா் அவரது கல்விச் சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டாா். இதன்பின்னா் நடைபெற்ற தோ்தலில் நிஷா சௌகானை தோ்வு செய்தனா்‘ என்றாா் அந்த அதிகாரி.

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவா் நிஷா செய்தியாளா்களிடம் கூறுகையில், தனது வெற்றி இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் சின்னம். எங்கள் கிராமம் இஸ்லாமியா்கள் ஆதிக்கம் கொண்ட கிராமம். ஆனால் இங்கு இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தின் பழைய பாரம்பரியம் இன்னும் உள்ளது. குறிப்பாக இங்குள்ள மேவாட் பகுதியில் எந்த மத பாகுபாடும் கிடையாது. இங்கு நான் சா்பஞ்சாக தோ்ந்தெடுக்கப்பட்டதும் ஒரு உதாரணம். எனது வெற்றி இப்பகுதியின் வகுப்புவாத சகோதரத்துவத்திற்கான செய்தியாக உள்ளது‘ என நிஷா சௌகான் தெரிவித்தாா்.

முன்னாள் சிரோலி சா்பஞ்சும் தற்போதைய வாா்டு உறுப்பினருமான அஷ்ரஃப், ‘சிறந்த நிா்வாகத்திற்கான நம்பிக்கையில் இந்த பஞ்சாயத்து நிஷாவைத் தோ்வு செய்தது‘ என்றாா்.

‘இங்கு இந்துக்களும் இஸ்லாமியா்களும் நல்லிணக்கத்தில் உள்ளனா். நாங்கள் ஒருவருக்கொருவா் மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் முழுமையாக பங்கேற்கிறோம்‘ என்றும் கூறுகிறாா் அஷ்ரஃப்.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான வழக்கு ஏப். 15-ல் விசாரணை?

வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் ஏப். 15 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அ... மேலும் பார்க்க

ஆளுநர் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படக்கூடாது! -உச்சநீதிமன்ற தீர்ப்பு தெரிவிப்பது என்ன?

தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் சில, உரிய காரணமின்றி காலதாமதப்படுத்தப்பட்டு வருவதாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு தரப்பிலிரு... மேலும் பார்க்க

சம்பல் ஜாமா மசூதியின் பெயரை மாற்றிய தொல்லியல் துறை!

சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் பெயரை ‘ஜும்மா மசூதி’ எனக் குறிப்பிட்டுள்ள பெயர்ப்பலகையை தொல்லியல் துறையினர் மசூதியில் நிறுவவுள்ளனர். உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜாமா மசூதியின் உள்ளே கோவில்... மேலும் பார்க்க

வளர்ச்சித் திட்டங்கள் மறுஆய்வு: ஜம்மு-காஷ்மீரில் அமித் ஷா தலைமையில் முக்கிய கூட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டங்களை மறுஆய்வு செய்வதற்கான உயர்நிலைக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தொடங்கியது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில் ஜம்மு-காஷ்... மேலும் பார்க்க

ஹைதராபாத் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 5 பேருக்கு மரண தண்டனை உறுதி!

ஹைதராபாத்தில் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான குற்றவாளிகள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை தெலங்கானா உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பக... மேலும் பார்க்க

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் தொடங்கியது: முக்கிய தலைவர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்: காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் தேசிய மாநாடு ஆகிய இருபெரும் நிகழ்ச்சிகள் குஜராத்தின் அகமதாபாதில் இன்று(ஏப். 8) தொடங்கியுள்ளன.இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் பேரவைத் தோ்தலில் பா... மேலும் பார்க்க