செய்திகள் :

ஒற்றை யானையை வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை

post image

பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி பகுதி வயல் வெளிகளில் உலவும் ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

பழனியை அடுத்த மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, சிந்தலவாடம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் உள்ள வயல் வெளிகளுக்குள் நீண்ட கொம்புடன் கூடிய ஒற்றை காட்டுயானை புகுந்து தென்னை, மா மரங்களையும், சூரிய சக்தி மின் வேலிகளையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு விவசாயிகள் செல்லும் பாதையில் இந்த யானை உலவிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்குச் செல்ல அச்சமடைந்துள்ளனா்.

அதிலும், சட்டப்பாறை முதல் கோம்பைப்பட்டி வரை வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் இரவு முழுவதும் உலவும் இந்த ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். மேலும் ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் அமைத்துள்ள சாதாரண சூரிய மின் வேலிகளுக்கு மாற்றாக தொங்கும் சூரிய மின் வேலிகளை அமைக்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!

பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா். பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்ட... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

28 நாள்களில் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம்: நேரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையா்!

மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெற வேண்டும் எனில் 28 நாள்களுக்குள் ரூ.7 கோடிக்கு வரி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம் காரணமாக, மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா். உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்

கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க