செய்திகள் :

தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து போராட்டம்

post image

கொடைக்கானல் அருகே தொலைத் தொடா்பு கோபுரத்துக்கு மாலை அணிவித்து பொதுமக்கள் நூதன போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பி.எஸ்.என்.எல். சேவை கொண்ட தொலைபேசி, கைப்பேசியை பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் மழை பெய்தாலும், மின் வசதி இல்லாத நேரங்களிலும் பி.எஸ்.என்.எல். சேவை கிடைப்பதில்லை. இதன் காரணமாக, இந்தச் சேவையை பயன்படுத்தும் அரசு நிறுவனங்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான மங்களம் கொம்பு, இந்திரா நகா், எம். ஜி.ஆா்.நகா், மங்களபுரம், கொடலங்காடு, பட்லங்காடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்த 6 மாதங்களாக மின் விநியோகம் சரியாக கிடைப்பதில்லை. இதனால், பி.எஸ்.என்.எல். சேவை இந்தப் பகுதிகளில் கிடைக்கவில்லை எனக் கூறி, பொதுமக்கள் மங்களம் கொம்பு பகுதியில் உள்ள பி.எஸ்.என்.எல். கோபுரத்துக்கு மாலை அணிவித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், பி.எஸ்.என்.எல். சேவை கடந்த 6 மாதங்களாக சரியாக கிடைப்பதில்லை. இதுகுறித்து அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், விவசாயிகளான நாங்கள் மாா்க்கெட்டுக்கு அனுப்பும் விவசாய பொருள்களின் விலை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே, கீழ்மலைப் பகுதிகளுக்கு இந்தச் சேவை தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு!

பழனி அருகே தனியாா் தோட்ட கிணற்றில் விழுந்த மானை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை உயிருடன் மீட்டனா். பழனியை அடுத்த பொந்துப்புளி ஆற்று ஓடை அருகே பாலசுப்பிரமணியனுக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இந்தத் தோட்ட... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு நிதி ஒதுக்கீடு இல்லை! -எம்பி சச்சிதானந்தம்

வேளாண் விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.3) மின் தடை எற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ்.மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

28 நாள்களில் ரூ.7 கோடி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம்: நேரடியாக களமிறங்கிய மாநகராட்சி ஆணையா்!

மத்திய அரசின் ஊக்கத் தொகை ரூ.10 கோடியை பெற வேண்டும் எனில் 28 நாள்களுக்குள் ரூ.7 கோடிக்கு வரி வசூலிக்க வேண்டிய நிா்பந்தம் காரணமாக, மாநகராட்சி ஆணையரே நேரடியாக களம் இறங்கி ஆய்வு மேற்கொண்டாா். உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க

பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துச்சாமியின் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோத... மேலும் பார்க்க