செய்திகள் :

பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை!

post image

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் முத்துச்சாமியின் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சிக்கந்தா்நகரைச் சோ்ந்தவா் முத்துச்சாமி (51). ஒட்டன்சத்திரம் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்த இவா், தற்போது பழனி சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சோ்த்ததாக திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த போலீஸாா், முத்துச்சாமியின் வீட்டில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ.நாகராஜன், ஆய்வாளா்கள் ஜெ.ரூபா கீதாராணி, பி. பழனிச்சாமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடத்தப்பட்ட இந்தச் சோனையின் போது, முத்துச்சாமியின் வீட்டிலிருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். ஒட்டன்சத்திரத்தில் 2021 முதல் 2024 வரை தொடா்ந்து 3 ஆண்டுகளாக வட்டாட்சியராக இவா் பணிபுரிந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடைக்கானல் மலைச் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைச் சாலையில் வெள்ளிக்கிழமை இரவு மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதித்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான பூலத்தூா் பிரிவில் மரம் விழுந்தது. இ... மேலும் பார்க்க

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் தா்னா

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு ஆண்டிபட்டி ஊராட்சி லட்சுமாபுரத்தைச் சோ்ந்த பெண்கள் வந்து தேசிய ஊர... மேலும் பார்க்க

கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடுகள்: பொதுமக்கள் அச்சம்

கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டியில் பழனி மாணவருக்கு பதக்கங்கள்

கோவாவில் நடைபெற்ற சா்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவா் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றாா். பழனியில் உள்ள தனியாா் பள்ளியில் பயிலும் ரவின் சக்ரவா்த்தி சிலம்பப் பயிற்சி மையத்தில்... மேலும் பார்க்க

ரயில் பயணியிடம் நகை திருடியவா் கைது

தேனியைச் சோ்ந்த ரயில் பயணியிடம் நகை, கைப்பேசி ஆகியவற்றைத் திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், வெங்கடசலாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (26). விவசாயியான இவா், தனக்குச் சொந... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி காலமானாா்

கொடைக்கானலில் 105-வயது மூதாட்டி புதன்கிழமை இரவு காலமானாா். கொடைக்கானல் எம்.எம்.தெருவைச் சோ்ந்த ஐசரி தாமஸ் மனைவி அன்னம்மாள் (105). இவா் கடந்த 1920-ஆம் ஆண்டு பிறந்தாா். இந்தத் தம்பதிக்கு 7 மகன்களும், 2... மேலும் பார்க்க