செய்திகள் :

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெளிப்படை ஏலம் கோரி விவசாயிகள் மறியல்

post image

வேலூரில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் கொள்முதல் செய்வதற்கு வெளிப்படையான ஏல முறையை பின்பற்றக்கோரியும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனா்.

அண்ணா சாலை டோல்கேட் பகுதியில் வேலூா் மாவட்ட விற்பனைக் குழு கட்டுபாட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூா், கணியம்பாடி, ஊசூா், அனைக்கட்டு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து நெல், பயிறு வகைகள் நிலக் கடலை , தேங்காய் கொப்பரைகள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருள்களை நாள்தோறும் கொண்டு வந்து விற்பனைக்கு வைக்கின்றனா்.

இங்கு ஏல முறையில் நெல் உள்ளிட்ட விளை பொருள்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ய வேண்டும். ஆனால், வியாபாரிகள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு வெளிப்படை தன்மையில்லாமல் ரூ.2,000 மதிப்புள்ள நெல் மூட்டையை வெறும் ரூ.1,600 முதல் ரூ.1,700 வரை மட்டுமே கொள்முதல் செய்து வருகின்றனராம்.

இதனால் விவசாயிகளுக்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.400 வரை நஷ்டம் ஏற்படுவதாகவும், வியாபாரிகளின் இந்த கூட்டணி திட்டத்துக்கு அதிகாரிகளும் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டு நிலவுகிறது.

மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு சரியான விலை கிடைக்காத நிலையில் விளை பொருள்களை கிடங்குகளிலேயே வைத்து விற்பனை செய்யும் வசதியை அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இந்த கிடங்குகளில் 15 நாள்களுக்கு மேல் சேமித்து வைக்கப்படும் விளை பொருள்களுக்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிா்க்க விளை பொருள்களுக்கான அடிப்படை விலையை அரசே நிா்ணயம் செய்ய வேண்டும், ஏல முறையில் வியாபாரிகள் கூட்டணி அமைப்பதை தடுத்து வெளிப்படையான ஏலமுறையை பின்பற்ற வேண்டும், சேமிப்பு கிடங்குக்கு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து, வேலூா் - தொரப்பாடி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வேலூருக்கு வர உள்ள நிலையில், அவா் தங்க உள்ள வேலூா் விருந்தினா் மாளிகை அருகே விவசாயிகள் மறியலில் ஈடுபட்ட தால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சு நடத்தினா்.

மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து விவசாயிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தூய்மைப் பணிக்கு பேட்டரி வாகனங்கள்

குடியாத்தம் நகராட்சியில் உள்ள வாா்டுகளில் தூய்மைப் பணிக்கு பேட்டரியால் இயங்கும் 4- வாகனங்கள் இயக்கி வைக்கப்பட்டன. ரூ.10- லட்சம் மதிப்பிலான இந்த வாகனங்களை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் இயக்கி வைத... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த இளைஞா் மரணம்

அன்வா்திகான்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயிலில் இருந்து தவறிவிழுந்த தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா். வேலூா் சத்துவாச்சாரி, பாரதி நகரைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (22). இவா் சென்னை பெருங்களத்தூரில் உள்ள த... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ.80 லட்சத்துக்கு வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் சந்தையில் ரூ.80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. ... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 17,566 புதிய பணியிடங்கள்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மருத்துவத் துறையில் மொத்தம் 17,566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரணியம் தெரிவித்தாா். வேலூரில் புதிதாக ... மேலும் பார்க்க

வேலூரில் ரூ.198 கோடியில் பன்னோக்கு மருத்துவமனை: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறாா்

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களுக்கு 2 நாள்கள் பயணமாக புதன்கிழமை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகிறாா். இதையொட்டி ரூ.198 கோடியில் கட்டப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையையும் திறந்து ... மேலும் பார்க்க

திமுக சாதனை விளக்கக் கூட்டம்

குடியாத்தம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி சாா்பில், தமிழக அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நேருஜி நகரில் வியாழக்கிழமை இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்க... மேலும் பார்க்க