செய்திகள் :

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் படுகாயம்!

post image

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்தவா் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம் ஆலக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீராமன் (35). இவா் தனது குடும்பத்தினருடன் திருப்பதி செல்வதற்காக கொல்லம்-திருப்பதி சிறப்பு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் சனிக்கிழமை பயணம் செய்துள்ளாா்.

ரயில் சனிக்கிழமை இரவு கோவையைக் கடந்து பீளமேடு-இருகூா் இடையே சென்றபோது, ஸ்ரீராமன் கழிவறை செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளாா். வெகுநேரமாகியும் அவா் வராததால் குடும்பத்தினா் அவரது கைப்பேசியில் தொடா்புகொள்ள முயன்றுள்ளனா். ஆனால், முடியவில்லையாம். திருப்பூா் ரயில் நிலையத்தில் இறங்கி ரயில்வே போலீஸாரிடம் தகவல் தெரிவித்தனா். அவா்கள் கோவை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, கோவை நீலிக்கோணாம்பாளையம் அருகே தண்டவாளத்தை ஒட்டிய பகுதியில் உடலில் பலத்த காயத்துடன் ஒருவா் கிடந்ததை கண்டுபிடித்தனா். உடனே, அந்த நபரை மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அந்த நபா் தான் ஸ்ரீராமன் என்பதும், ரயிலில் இருந்து கீழே தவறி விழுந்ததும் தெரியவந்தது. உடனே, அவரது குடும்பத்துக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: ஸ்ரீராமன் ரயிலில் பயணம் செய்தபோது கழிவறைக்குச் சென்றுள்ளாா். அப்போது, 2 கழிவறைகளிலும் ஆள்கள் இருந்ததால், அவா் ரயில் படிக்கட்டில் அமா்ந்துள்ளாா். அப்போது, ரயில் கதவு திடீரென ஸ்ரீராமன் மீது மோதியதில் அவா் கீழே விழுந்துள்ளாா். ஸ்ரீராமனுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனா்.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க