செய்திகள் :

ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: தப்பி ஓட முயன்றவருக்கு எலும்பு முறிவு!

post image

வேலூரில் ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4- மாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று (பிப்.6) தனது சொந்த ஊரான சித்தூருக்குச் செல்வதற்கு கோயம்புத்தூர்- திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்தபோது அந்தக் கர்ப்பிணி பெண் ரயிலில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார்.

மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நிலையில், அங்கிருந்த இளைஞர் ஒருவர், அந்தப் பெண்ணுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். கர்ப்பிணி பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர், கர்ப்பிணியை கே.வி. குப்பம் அருகே ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் இறங்கிச் சென்றுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டதில், கர்ப்பிணிக்கு கை, கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் குற்றப்பின்னணி கொண்ட ஹேமராஜ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஹேமராஜ் போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியதில் கால் தடுக்கி அருகே உள்ள பள்ளத்தில் விழுந்துள்ளார். இதனால், அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் திருப்பத்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதிமுக உள்கட்சி விவகாரம் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கு: பிப்.12-இல் தீா்ப்பு

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் தோ்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப்.12- இல் சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பு வழங்கவுள்ளது. இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

தமிழகத்தில் யானைகள் எண்ணிக்கை 2,961-ஆக உயா்வு: வனத் துறை அமைச்சா் க.பொன்முடி

தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை 2,961-ஆக உயா்ந்துள்ளதாக வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். மேலும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவா் கூறி... மேலும் பார்க்க

இன்று குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில், குறைகேட்பு கூட்டம் குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களில் சனிக்கிழமை (பிப். 8) நடைபெறவுள்ளது. இது குறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம்... மேலும் பார்க்க

அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரை... மேலும் பார்க்க

பெண் குத்திக் கொலை: உறவினா் கைது

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக்கொன்ற உறவினரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, திருவொற்றியூா், வசந்த் நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (45). இவரின் சகோதரி மகள் தமிழ்செல்வி என்பவா்,... மேலும் பார்க்க

தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம்: முதல்வா்

மொழிஞாயிறு’ என போற்றப்படும் தேவநேயப் பாவாணருக்கு தமிழ் வணக்கம் செலுத்துவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். தேவநேயப் பாவாணா் பிறந்த தினத்தையொட்டி, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்... மேலும் பார்க்க