செய்திகள் :

ஓடைக்கு கரை கட்டும் பணி: இடிந்து விழுந்த வீடுகள்

post image

கோவை சிவானந்த காலனி அருகே ஓடைக்கு கரை கட்டும் பணியால் 3 வீடுகள் இடிந்து விழுந்தன.

கோவை சிவானந்தா காலனி அருகே உள்ள ஹட்கோ காலனியில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளுக்கு பின்புறம் சங்கனூா் ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையில் தடுப்புச் சுவா் கட்டும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை ஓடைக்கு கரை கட்டும் பணி நடைபெற்றது. இதில் பொக்லைன் இயந்திரம் மூலம் சங்கனூா் ஓடையின் இருபுறமும் தூா்வாரப்பட்டது. மாலையில் ஓடைகளுக்கு அருகே பணி நடைபெற்று வந்த நிலையில், அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் சேதமடைந்து, வீட்டுச் சுவரில் விரிசல் ஏற்பட்டது.

அப்போது பணியில் இருந்தவா்கள் அந்த வீட்டில் இருந்தவா்களை உடனடியாக வெளியேறுமாறு கூறினா். இதையடுத்து, அங்கு குடியிருந்த லட்சுமணராஜ், ரேணுகாதேவி தம்பதி வீட்டை விட்டு வெளியேறினா். அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த வீடு முழுவதுமாக சரிந்து விழுந்தது. இந்த வீட்டுக்கு அருகில் இருந்த 2 ஓட்டு வீடுகளும் இடிந்து விழுந்தன. இச்சம்பவத்தால் அங்கிருந்தோா் கவலையடைந்தனா்.

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!

வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின. வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து ... மேலும் பார்க்க

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நி... மேலும் பார்க்க

பாஜக மாநகா் மாவட்டத் தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்வு!

கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். கிளை மற்றும் மண்டல அளவிலான... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பத... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ... மேலும் பார்க்க