எங்கள் நாட்டை விடவும் இந்தியாவில் சிறந்த கட்டமைப்பு; அமெரிக்கர்களே சொன்னார்கள்: ...
ஓட்டுநரை வெட்டிய வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை
பெரியகுளத்தில் லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டிய வழக்கில், மற்றொரு ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரியகுளம் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
பெரியகுளம் அருகேயுள்ள வேல்நகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி மகன் தென்னரசு (24). எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பிரதீப். லாரி ஓட்டுநா்களான இவா்கள் இருவருக்குமிடையே வாகனத்தில் சரக்கு ஏற்றுவது தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 19.10.2022 அன்று, தென்னரசு வேல்நகரில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பிரதீப் முன்விரோதம் காரணமாக, தென்னரசை கத்தியால் வெட்டினராம். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரதீப்பை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விசாரணை பெரியகுளம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரதீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகா் தீா்ப்பளித்தாா்.