Amit shah-வின் அட்டாக், களத்தில் A.Raja, `மதுரை சம்பவம்!' | Elangovan Explains
மனைவிக்கு கொலை மிரட்டல்: வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு
போடியில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.
போடி தேவா் குடியிருப்பில் வசிப்பவா் சினேகா (25). இவருக்கும் கருப்பையா மகன் சசிக்குமாா் (33) என்பவருக்கும் கடந்த ஒன்றரையாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், சினேகா பெயரில் உள்ள சொத்தை சசிக்குமாா் தன் பெயருக்கு மாற்றி எழுதித் தரக் கூறி, மனைவியுடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சினேகா போடி நகா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிக்குமாா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சசிக்குமாா் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.