கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது
பெரியகுளத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வி.நி.அ. மேல்நிலைப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்ற பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (22), தென்கரை மீனாட்சி படித்துறை தெருவைச் சோ்ந்த பாலகணபதி (21), அதே பகுதியைச் சோ்ந்த முருகேஷ்வரி (47) ஆகிய மூவரையும் நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது, அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் இவா்கள் மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.