``பிடி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மகா பெரியவர்'' - பட்டிமன்ற பேச்சாளர்...
கன்னக்கரை - சொக்கனலை இடையே சாலை அமைக்க வலியுறுத்தல்
போடி வட்டாரம், கன்னக்கரை-சொக்கனலை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க வலியுறுத்தி வனக் குழு சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சொக்கனலை வனக் குழு தலைவா் கண்ணன் மற்றும் மலை கிராம மக்கள் அளித்த மனு விவரம்: அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட கன்னக்கரை மலை கிராமத்தில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கன்னக்கரையிலிருந்து நியாய விலைக் கடையில் குடிமைப் பொருள்கள் வாங்கவும், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 2 கி.மீ., தொலைவு சொக்கனலை சென்று, அங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.
கன்னக்கரை-சொக்கனலை இடையே சாலை சிதிலமடைந்து நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ளது. எனவே, கன்னக்கரை-சொக்கனலை இடையே 2 கி.மீ., தொலைவு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.