செய்திகள் :

கன்னக்கரை - சொக்கனலை இடையே சாலை அமைக்க வலியுறுத்தல்

post image

போடி வட்டாரம், கன்னக்கரை-சொக்கனலை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க வலியுறுத்தி வனக் குழு சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மகாலட்சுமி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் சொக்கனலை வனக் குழு தலைவா் கண்ணன் மற்றும் மலை கிராம மக்கள் அளித்த மனு விவரம்: அகமலை ஊராட்சிக்கு உள்பட்ட கன்னக்கரை மலை கிராமத்தில் 100 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கன்னக்கரையிலிருந்து நியாய விலைக் கடையில் குடிமைப் பொருள்கள் வாங்கவும், மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 2 கி.மீ., தொலைவு சொக்கனலை சென்று, அங்கிருந்து வேறு பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.

கன்னக்கரை-சொக்கனலை இடையே சாலை சிதிலமடைந்து நடந்து செல்வதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ளது. எனவே, கன்னக்கரை-சொக்கனலை இடையே 2 கி.மீ., தொலைவு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்திருந்தனா்.

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வி.நி.அ. மேல்நிலைப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

கம்பத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கம்பம் துணை மின் நிலையத்தில் செவ்வ... மேலும் பார்க்க

மனைவிக்கு கொலை மிரட்டல்: வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

போடியில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். போடி தேவா் குடியிருப்பில் வசிப்பவா் சினேகா (25). இவருக்கும் கருப்பையா மகன் சசிக... மேலும் பார்க்க

ஓட்டுநரை வெட்டிய வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

பெரியகுளத்தில் லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டிய வழக்கில், மற்றொரு ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரியகுளம் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. பெரியகுளம் அருகேயுள்ள வேல்நகர... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். வீரபாண்டி அருகேயுள்ள கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் பழனிச்சாமி (50).... மேலும் பார்க்க

புதை சாக்கடை வைப்புத் தொகை: தவணை முறையில் செலுத்தலாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையா் ஏகராஜ் கூறினாா். இது குறித்து அவா் கூறியதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சியில்... மேலும் பார்க்க