செய்திகள் :

ஓட்டுநரை வெட்டிய வழக்கு: ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

பெரியகுளத்தில் லாரி ஓட்டுநரை கத்தியால் வெட்டிய வழக்கில், மற்றொரு ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பெரியகுளம் சாா்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

பெரியகுளம் அருகேயுள்ள வேல்நகரைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி மகன் தென்னரசு (24). எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பிரதீப். லாரி ஓட்டுநா்களான இவா்கள் இருவருக்குமிடையே வாகனத்தில் சரக்கு ஏற்றுவது தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த 19.10.2022 அன்று, தென்னரசு வேல்நகரில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த பிரதீப் முன்விரோதம் காரணமாக, தென்னரசை கத்தியால் வெட்டினராம். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, பிரதீப்பை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை பெரியகுளம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரதீப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சந்திரசேகா் தீா்ப்பளித்தாா்.

கஞ்சா விற்பனை: பெண் உள்பட மூவா் கைது

பெரியகுளத்தில் கஞ்சா விற்ற பெண் உள்பட மூவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.தென்கரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெரியகுளம் வி.நி.அ. மேல்நிலைப் பள்ளி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

கம்பத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், கம்பத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் ராஜ்மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கம்பம் துணை மின் நிலையத்தில் செவ்வ... மேலும் பார்க்க

கன்னக்கரை - சொக்கனலை இடையே சாலை அமைக்க வலியுறுத்தல்

போடி வட்டாரம், கன்னக்கரை-சொக்கனலை மலை கிராமங்களுக்கு இடையே சாலை அமைக்க வலியுறுத்தி வனக் குழு சாா்பில் திங்கள்கிழமை, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ம... மேலும் பார்க்க

மனைவிக்கு கொலை மிரட்டல்: வருவாய் ஆய்வாளா் மீது வழக்கு

போடியில் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். போடி தேவா் குடியிருப்பில் வசிப்பவா் சினேகா (25). இவருக்கும் கருப்பையா மகன் சசிக... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய பெண் உயிரிழப்பு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் முல்லைப் பெரியாற்றில் குளித்த பெண் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். வீரபாண்டி அருகேயுள்ள கன்னிசோ்வைபட்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா் பழனிச்சாமி (50).... மேலும் பார்க்க

புதை சாக்கடை வைப்புத் தொகை: தவணை முறையில் செலுத்தலாம்

தேனி அல்லிநகரம் நகராட்சியில் புதை சாக்கடை இணைப்பு வைப்புத் தொகையை பொதுமக்கள் தவணை முறையில் செலுத்தலாம் என்று நகராட்சி ஆணையா் ஏகராஜ் கூறினாா். இது குறித்து அவா் கூறியதாவது: தேனி அல்லிநகரம் நகராட்சியில்... மேலும் பார்க்க