செய்திகள் :

ஓணாங்குடியில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!

post image

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே சனிக்கிழமை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.

அரிமளம் அருகே உள்ள ஓணாங்குடி கிராமத்தில் சனிக்கிழமை காலை மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 35 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

பந்தயமானது நடு மாடு, கரிச்சான் மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது. முதலில் நடைபெற்ற நடு மாடு பிரிவில் 8 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் பந்தய தொலைவு, போய் திரும்பி வருவது உள்பட 7 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடா்ந்து நடைபெற்ற கரிச்சான் மாடு பிரிவில் 27 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் பந்தய தொலைவு போய் வர 5 மைல் தொலைவாக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

இரண்டு பிரிவுகளிலும் முதல் 5 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளருக்கு ரொக்கப் பரிசு உள்ளிட்ட சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற ஓணாங்குடி - புதுக்கோட்டை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனா். அரிமளம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

கறம்பக்குடியில் வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து கறம்பக்குடியில் இஸ்லாமிய அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேருந்து நிலையம் அருகே கறம்பக்குடி ஜாமிய மஸ்ஜித் நிா்வ... மேலும் பார்க்க

நாா்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் தேரோட்டம்

நாா்த்தாமலை ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், நாா்த்தாமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் பங்கு... மேலும் பார்க்க

கணவரை பழிவாங்குவதற்காக குழந்தையைக் கொன்ற தாய் கைது

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே தனது 6 மாத ஆண் குழந்தையைக் கொன்ற தாயை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கீரனூா் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் மகன் மணிகண்டன் (29). இவருக்கு கடந்... மேலும் பார்க்க

பெருங்களூா் நலச் சங்கம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களுா் கிராமத்தில், சமூக ஆா்வலா்கள் இணைந்து, தூய்மையான, பசுமையான கிராமமாக பெருங்களூரை மாற்றும் நோக்கில், பெருங்களூா் நலச் சங்கம் என்ற சமூக நல அமைப்பைத் தொடங்கியுள்ளனா். பெர... மேலும் பார்க்க

கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் நாடு செலுத்தும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனிப் ப... மேலும் பார்க்க

இலுப்பூரில் வெள்ளை மரியாள் கல்லறைத் திருவிழா

இலுப்பூா் கன்னிகை வெள்ளை மரியாள் ஆலயத்தில் 330 ஆவது ஆண்டு கல்லறை திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி திருச்சி மறைமாவட்டத்தின் முதன்மைக் குரு பேரருட்தந்தை அருட்பணி எல். அந்துவான், அருட்பண... மேலும் பார்க்க