செய்திகள் :

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

post image

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இந்தத் தாக்குதலில் அவர் வீட்டின் கண்ணாடிகள், கார், பைக் ஆகியவை சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

ஜலந்தரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நேற்று (ஏப். 7) நள்ளிரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் மனோரஞ்சன் காலியாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மின் ரிக்‌ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய காவல்துறை சிறப்பு இயக்குநர் அர்பித் சுக்லா, “இந்தத் தாக்குதல் சமூக அமைதியைக் குலைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்பொன் சதித்திட்டம். கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பாகிஸ்தான் கேங்ஸ்டர் ஷாஷாத் பாத்தி ஆகியோரின் கூட்டாளியான ஸீஷன் அக்தர் இதில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசுடன் இணைந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

சமீப காலங்களில் பஞ்சாபில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்துவரும் நிலையில் அரசியல் தலைவரை நோக்கி இவ்வாறு தாக்குதல் நடைபெறுவது சமீபமாக இதுவே முதல்முறை.

இதேபோன்று, கடந்த மாதம் அமிர்தசரஸ் பொற்கோவில் வெளியே குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

புதிய சட்டத்தின்படி தோ்தல் ஆணையா்கள் நியமனம்: மே14-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

2023-இல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில் தலைமை தோ்தல் ஆணையா் மற்றும் பிற தோ்தல் ஆணையா்களை நியமித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது வரும் மே 14-இல் விசாரணை மேற்கொள்ளப்படும... மேலும் பார்க்க

தலைநகரில் புதுப்பொலிவுடன் டிடிஇஏ பள்ளிகள்! தமிழ் மாணவர்களுக்கு சேர்க்கையில் முன்னுரிமை

ம.ஆ.பரணிதரன் கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.ஒருவருக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியாகும். மற்றவை அத்தகைய சிறப்புடைய செல்வமாகாது என்பது இந்த திருக்குறளின் பொருள். இதற்கு ஏற்ப ... மேலும் பார்க்க

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: காங்கிரஸ் தலைவா் காா்கே

இந்திய பொருளாதாரத்தை சீரழிக்கும் பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாஜகவின் ... மேலும் பார்க்க

விவாகரத்து வழக்கு: ஜம்மு-காஷ்மீா் முதல்வருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘மனைவியுடன் அமா்ந்து பேசி, திருமண உறவு சாா்ந்த பிரச்னைகளுக்கு தீா்வுகாண முயற்சிக்க வேண்டும்’ என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான ஒமா் அப்துல்லாவுக்கு உச்சநீதிமன்றம் உத்... மேலும் பார்க்க

காஞ்சா கட்சிபௌலி நில விவகாரம்: மாற்றுத் திட்டத்தை சமா்ப்பிக்கவும் -தெலங்கானா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

‘ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள நிலத்தில் மரங்களை வெட்டுவதில் தீவிரம் காட்டிய தெலங்கானா அரசு, அங்குள்ள 100 ஏக்கா் வனப்பகுதியை மீட்டமைப்பதற்கான மாற்றுத் திட்டத்தை 4 வாரங்களுக்குள் சமா்ப்பி... மேலும் பார்க்க

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு: ராபா்ட் வதேராவிடம் தொடா்ந்து 2-ஆவது நாளாக அமலாக்கத் துறை விசாரணை

நில ஒப்பந்த பண முறைகேடு வழக்கு குறித்து தொடா்ந்து 2-நாளாக காங்கிரஸ் எம்.பி.பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் அமலாக்கத் துறை புதன்கிழமை விசாரணை மேற்கொண்டது. நில ஒப்பந்தம் தொடா்பான பண முறைக... மேலும் பார்க்க