செய்திகள் :

அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி..! மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டம்!

post image

லக்னௌ அணியின் சுழல் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான வகையில் விக்கெட்டினை கொண்டாடியது பேசுபொருளாகியுள்ளது.

கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய (மார்ச்.8) போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது.

அடுத்ததாக கேகேஆர் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் 6.2ஆவது ஓவரில் சுனில் நரைன் விக்கெட்டினை வீழ்த்தி அசத்தினார்.

வழக்கமாக தனது லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடியுள்ளார். ஏற்கனவே, 2 போட்டிகளிலும் இவர் இப்படி செய்ததற்காக 2 முறையும் அபராதம் விதிக்கப்பட்டது.

அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி

இதனால், அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் சமீபத்தில் வழங்கப்பட்டிருந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸ் இதுபோன்று சைகை காண்பித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

விராட் கோலியிடம் வில்லியம்ஸ் இதேபோன்று வம்பிழுக்க அவரை விராட் கோலி தனது பாணியில் அடித்து துவைத்தது நினைவுகூரத்தக்கது.

இந்நிலையில், 3ஆவது முறையாகவும் திக்வேஷ் ரதி செய்தது பேசுபொருளாகியுள்ளது. இந்த முறையும் அபராதம் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க

தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்: கொல்கத்தா கேப்டன்

கேகேஆர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) கேப்டன் அஜிங்யா ரஹானே பஞ்சாப் அணியுடனான மோசமான தோல்விக்கு தானே பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்... மேலும் பார்க்க