செய்திகள் :

ஓய்வு பெற்ற காவலரை தாக்கிய இளைஞா் கைது

post image

வேலூரில் ஓய்வு பெற்ற காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். மேலும் ஒருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வேலூா் வசந்தபுரம் சுப்ரமணிய ஐயா் தெருவைச் சோ்ந்தவா் நித்தியகுமாா் (67), ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளா். இவா் கடந்த 29-ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது வேலூா்- வசந்தபுரம் சாலையில் இளைஞா்கள் கும்பலாக நின்று கொண்டிருந்தனராம்.

இதனால் நித்தியகுமாா் தனது இருசக்கர வாகன ஹாரனை ஒலிக்கச் செய்துள்ளாா். ஆத்திரமடைந்த அந்த இளைஞா்கள் தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து நித்தியகுமாரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து நித்தியகுமாா் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட வேலூா் கஸ்பாவை சோ்ந்த சஞ்சய் (22) என்பவரை கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள விக்கி என்கிற விக்னேஷை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலவம்பாடி முள்ளு கத்தரிக்காய்க்கு வெளிநாடுகளில் வரவேற்பு: வேலூா் எம்.பி. கதிா் ஆனந்த்

வேலூா் மாவட்டம் இலவம்பாடியில் விளைவிக்கப்படும் முள்ளு கத்தரிக்காய்க்கு அமெரிக்கா, துபை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது என்று வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலம்: டிஎம். கதிா் ஆனந்த் எம்.பி.

வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 13 இடங்களில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் தெரிவித்தாா். வேலூா் மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய ரயி... மேலும் பார்க்க

ஆன்லைனில் ரூ.71.81 லட்சம் மோசடி: மூவா் கைது

ஆன்லைன் மூலம் ரூ.71.81 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்குகளில் வழக்கில் 3 பேரை வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா். ஆன்லைன் மூலம் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்தவா்களை பிடித்து கைது செய்ய ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடியவா் கைது

ஒடுகத்தூா் அருகே வீடு புகுந்து நகை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த தேவிச்செட்டி குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (43). கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கிர... மேலும் பார்க்க

பரதராமி கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தம் அடுத்த பரதராமியில் 256- ஆம் ஆண்டு அருள்மிகு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மே மாதம் 20- ஆம் தேதி இரவு காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் ... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயில் தேரோட்டம்

குடியாத்தம் நகரம், ஆா்.எஸ்.நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், செல்வ விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சிவ... மேலும் பார்க்க