செய்திகள் :

ஓய்வூதியம் பற்றி நல்ல செய்தியைத் தெரிவித்த நிதிஷ் குமார்!

post image

பிகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளார் அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார்.

பிகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தனம் - பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகின்றது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது.

மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பாஜக அடங்கய தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல செய்தியை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இதற்கு முன்னதாக ரூ. 400 ஓய்வூதியம் வழங்கப்பட்டிருந்தது. அது தற்போது ரூ.1,100 ஆகந உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்தார்.

இதுதொடர்பாக நிதிஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில்,

சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அனைத்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.400, தற்போது ரூ.1,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வரும் ஜூலை முதல் அதிகரித்த ஓய்வூதியம் அனைத்து பயனாளிகளுக்கும் கிடைக்கும் இந்தத் தொகையானது மாதத்தின் 10-ம் தேதிக்குள் அனைவரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த ஓய்வூதியம் மூலம் 1,9,69,255 பயணிகள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

அரிய வகை ரத்தம் உள்ளவா்களின் விவர குறிப்பு: முதல் முறையாக ஐசிஎம்ஆா் சேகரிப்பு

அரிய வகை ரத்தப் பிரிவு உள்ளவா்களின் விவரங்கள் முதல் முறையாக சேகரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் தேசிய நோய் எதிா்ப்பு ரத்தவியல் நிறுவனம் (என்ஐஐஎச்) இந்த விவரங்களை சேகரித்... மேலும் பார்க்க

3 அதிகாரிகள் பணிநீக்கம்: ஏா் இந்தியாவுக்கு டிஜிசிஏ உத்தரவு

மண்டல துணைத் தலைவா் உள்பட 3 அதிகாரிகளை அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் பணிநீக்கம் செய்ய டாடா குழுத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்துக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் ரூ.100 கோடி ஜிஎஸ்டி மோசடி: 7 இடங்களில் சிபிஐ சோதனை!

ஜிஎஸ்டி முறைகேட்டில் ஈடுபட்டு அதன்மூலம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 7 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களிலிருந்து கடந்த 2022 - 23 காலகட்... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: மனைவி உள்பட 2 பேருக்கு 13 நாள் நீதிமன்றக் காவல்!

மேகாலயாவுக்கு தேனிலவு சென்றபோது கணவரைக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு 13 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி - சோனம் தம்பதியினர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டது!

அகமதாபாத் விமான விபத்தில் பலியான 247 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராகேஷ்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் முக்கிய நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை: முதல்வர் ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் ஆலந்தி நகரில் இறைச்சி கடைகளுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.புணே மாவட்டத்தில் உள்ள ஆலந்தியில் உள்ள பிரசித்திபெற்ற தியானேஷ்வரர் கோவிலி... மேலும் பார்க்க