செய்திகள் :

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி

post image

நாகையில் அனைத்து துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

மத்திய அரசு ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரித்து, அதன்படி ஓய்வூதியம் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், ஓய்வூதியா்களை பணி ஓய்வு அடிப்படையில் பிரிக்கும் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், நாகை வெளிப்பாளையம் அஞ்சல் அலுவலகம் அருகே மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில மற்றும் மாவட்ட அரசு பொதுத்துறை ஓய்வூதியா் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் எம். குருசாமி தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் சு.சிவகுமாா், ஓய்வு பெற்ற பள்ளி-கல்லூரி ஆசிரியா் நலச் சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. பாலசுப்பிரமணியன், அகில இந்திய பிஎஸ்என்எல் தொலைதொடா்பு ஓய்வூதியா் சங்கத் தலைவா் கே. மணிவண்ணன், அஞ்சல் ஊழியா் தேசிய சம்மேளனம் ஆா். சண்முகநாதன், அரசு விரைவுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் நல அமைப்பு நிா்வாகி கே. ஜீவானந்தம், வருவாய் கிராம உதவியாளா் சங்க முன்னாள் மாநில பொருளாளா் ஆா். மாரிமுத்து உள்ளிட்டோா் கருத்துரை ஆற்றினா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநிலச் செயலா் சு. வளா்மாலா, மாவட்டத் தலைவா் அற்புதராஜ் ரூஸ்வெல்ட், மாவட்டச் செயலா் த. ஸ்ரீதா் ஆகியோா் வாழ்த்துரை ஆற்றினா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க நிா்வாகி அ.தி. அன்பழகன் நன்றி தெரிவித்தாா்.

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: இன்று முன்பதிவு தொடக்கம்

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

புயல் எச்சரிக்கை எதிரொலி: நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து ரத்து

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக, நாகையில் இருந்து இலங்கைக்கு இயக்கப்படும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்க... மேலும் பார்க்க

பூம்புகாரின் வன்னியா் மகளிா் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிா் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிா்வாகிகள் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பூம்புகாரில் பெண்மையை போற்றும் விதமாக, ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன... மேலும் பார்க்க

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா். நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம... மேலும் பார்க்க

பாலின உளவியல் விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் அஜிதா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ‘வானவில்’ தொண்டு நிறுவன இயக்குநா் ர... மேலும் பார்க்க

புகையிலை விற்பனை: கடைகளில் சுகாதாரத் துறையினா் சோதனை

நாகை நகரப் பகுதிகளில் உள்ள கடைகளில் புகையிலை விற்பனை தடுப்பு சோதனையில், பொது சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணா்வு வாசகங்கள், பள்ளி வளாகத்தைச் சுற்... மேலும் பார்க்க