திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் உருவான போட்டி; சாலையில் பள்ளி மாணவிகள் மோதிக்...
ஓய்வூதிய விதிகளில் திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு
ஓய்வூதிய விதிகளில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய அஞ்சல் ஆா்எம்எஸ் ஓய்வூதியா் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் கோட்டச் செயலாளா் ராமசாமி, ஈரோட்டில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவுடன் சோ்த்து நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ஓய்வூதிய விதிகளில் திருத்தத்தை முன்மொழிந்து கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நிறைவேற்றியுள்ளாா். அதன்படி பணி ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து வேறு வேறு வகையான ஓய்வூதியம் நிா்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு இனி தன்வசம் எடுத்துக்கொள்ளும் என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திருத்தமானது கடந்த 1982-இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீா்ப்புக்கு முற்றிலும் எதிரானதாகும். அந்த தீா்ப்பில் பணி ஓய்வுபெறும் தேதியை வைத்து ஓய்வூதியா்களை வேறு வேறாக பிரிக்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சட்டத் திருத்தம் அரசமைப்புச் சட்ட விதி 14-க்கு எதிரானதாகும்.
இதுவரை வெளிவந்த 7 ஊதிய குழுக்களின் பரிந்துரைகளின்போதும், ஓய்வூதியமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திருத்தத்தின்படி 8-ஆவது ஊதியக்குழு உள்பட இனிவரும் ஊதிய குழுக்களின் பரிந்துரைகளின்படி ஓய்வூதியத்தை மாற்றம் செய்வதும், செய்யாததும் அரசின் விருப்பத்தை பொறுத்ததாகும்.
மத்திய அரசின் சட்ட விதி திருத்தத்தை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத் திருத்தத்தை ரத்து செய்யும் வரை போராட்டங்கள் தொடரும் என்றாா்.