செய்திகள் :

ஓய்வை அறிவித்தது ஏன்? மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளக்கம்!

post image

ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 1,495 ரன்கள் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

35 வயதாகும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி புகழ்ப்பெற்றவர். டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இந்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எளிதான முடிவல்ல

எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உச்சபட்ச அளவில் விளையாடியதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன்.

ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல. ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரமென கருதுகிறேன். அதேசமயம் எனது கிரிக்கெட் வாழ்வின் அடுத்த கட்டத்தில் முழுமையான கவனத்தை செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தலைமைப் பயிற்சியாளர் (மெக்டொனால்டு) உடன் எனக்கு அருமையான பந்தம் இருந்தது. அவரது ஆதரவுக்கு பாராட்டுகள்.

பாகிஸ்தானில் எனது சகவீரர்களுக்காக நான் கைதட்டி மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.

ஸ்டாய்னிஸ் - நல்ல மனிதர்

ஆசி. தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்டு , “ஒருநாள் போட்டிகளில் ஸ்டாய்னிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக முக்கியமான அங்கமாக இருந்துள்ளார். முக்கியமான வீரராக மட்டுமில்லாமல் அருமையான மனிதரும்கூட. இயற்கையாகவே ஒரு நல்ல தலைவர் அவர். மிகவும் பிரபலமான நல்ல மனிதர்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கம்மின்ஸ், ஹேசில்வுட், மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இவரது ஓய்வு முடிவு ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

பிப்.19இல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியை பிப்.12க்குள் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ... மேலும் பார்க்க

கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார். இந்தியா - இங்கிலாந்த... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐச... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்... மேலும் பார்க்க