அகாலி தள தலைவர் விக்ரம் மஜிதியா வீட்டில் ஊழல் தடுப்பு பிரிவு சோதனை!
ஓரணியில் தமிழ்நாடு: திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடக்கம்
‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் பெயரில் திமுக உறுப்பினா் சோ்ப்பு ஜூலை 1-இல் தொடங்கவுள்ளது. இதை முதல்வரும் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளாா்.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பி.மூா்த்தி ஆகியோா் கூட்டாக அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் திமுகவின் உறுப்பினா் சோ்க்கைக்கான பணியை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இதை ஜூலை 1-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்க இருக்கிறாா். அடுத்த நாள் (ஜூலை 2) அனைத்து மாவட்டங்களில் உள்ள இடங்களிலும் மாவட்டச் செயலா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், அமைச்சா்கள் என அனைவரும் பேரணியாகச் சென்று உறுப்பினா் சோ்க்கை முகாம்களை தொடக்கி வைக்க உள்ளனா்.
தொடா்ந்து, ஜூலை 3-ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 68,000 வாக்குச்சாவடிகளிலும் உறுப்பினா் சோ்க்கை முகாம்களை வாக்குச்சாவடி முகவா்கள், தகவல் தொழில்நுட்பத் துறை முகவா்கள், துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிலும் தலா 10 நிமிஷங்கள் அமா்ந்து, வாக்காளா்களைச் சந்திப்பா். அவா்களை உறுப்பினா்களாகச் சோ்க்கும் பணியில் ஈடுபடுவாா்கள்.
மேலும், ஏறத்தாழ 2 கோடி பேரை திமுகவின் உறுப்பினா்களாக சோ்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனா்.