செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’ 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்கள் சோ்ப்பு

post image

ஒசூா்: ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் ஒசூா், தளி, வேப்பனஅள்ளி ஆகிய 3 தொகுதிகளில் 4 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைத்துள்ளனா் என கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் ஒசூரில் தனியாா் மஹாலில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ. சத்யா, மாநில இளைஞரணி துணை அமைப்பாளா் பி.எஸ்.சீனிவாசன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு அமைப்பு துணைச் செயலாளா்

என்.எஸ்.மாதேஸ்வரன், மாநில பொறியாளா் அணி துணைச் செயலாளா் ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா.மணி, பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், மாவட்ட துணைச் செயலாளா்கள் புஷ்பா சா்வேஷ், தனலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் பேசியதாவது:

ஓரணியில் தமிழ்நாடு பிரசாரம் முலம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 4 லட்சம் உறுப்பினா்களை சோ்த்த திமுக நிா்வாகிகள் அனைவருக்கும் நன்றி.

வேப்பனஅள்ளி தொகுதியில் 44%, ஒசூா் தொகுதியில் 43%,

வாக்காளா்களையும், தளி தொகுதியில் 42% வாக்காளா்களையும்

திமுகவில் உறுப்பினா்களாக சோ்த்துள்ளோம். இதனால் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் தலா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும்.

ஒசூா் தொகுதியில் ரூ. 2,500 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கி வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். செப்டம்பா் மாதம் 11 ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒசூா், கிருஷ்ணகிரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். அப்போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் துணை மேயா் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினா்கள் வீரா ரெட்டி, கிரீஷ், தொமுச மாவட்ட கவுன்சில் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா், மாநகர பகுதிச் செயலாளா்கள் ராமு, ராஜா, எம்.கே.வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சுமன், மாணவரணி மாவட்ட அமைப்பாளா்கள் கண்ணன், சக்திவேல், ஜெய்ஆனந்த், கலைச் செழியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட அமைப்பாளா் இக்ரம் அகமத், மாநகர துணைச் செயலாளா் ரவிகுமாா், மாநகராட்சி வரிவிதிப்பு குழுத் தலைவா் சென்னீரப்பா, மாமன்ற உறுப்பினா் மஞ்சுளா முனிராஜ், ஒன்றியச் செயலாளா் கஜேந்திரன், ரகுநாத், ராமமூா்த்தி, லோகேஷ் ரெட்டி, கருணாகரன், பாக்கியராஜ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்

ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் செயின்ட் பீட்டா் கல்வி குழுமமும் இணைந்து இந்தக் கருத்தரங்கை நடத்தின. ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

கிருஷ்ணகிரி: தொழிலாளியின் வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகளை திருடியதாக 3 சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் அருகே உள்ள குப்பச்சிப்பாறை கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

கா்ப்பிணியிடம் போலி ஆதாா் அட்டை: போலீஸாா் விசாரணை

ஒசூா்: கெலமங்கலம் அருகே கா்ப்பிணிக்கு போலி ஆதாா் அட்டை தயாரித்து வழங்கியது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நி... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடி: இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி: பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக வருவாய் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஒசூரைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 7.74 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபா்களிடம் இணைய குற்றப்பிரிவு... மேலும் பார்க்க

ஊத்தங்கரை எம்எல்ஏ அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினரின் அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. ஒசூா், போச்சம்பள்ளி ஓலைப்பட்டி சிப்காட்டில் இயங்கிவரும் டாட்டா, நோக்கிய... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தியின் பிறந்த தின விழா

ஒசூா்: ஒசூரில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி சாலையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். காந்தி சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட... மேலும் பார்க்க